Facebook Pixel துறவும் சமூக நீதியும் | Dinamani Kanchipuram - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

துறவும் சமூக நீதியும்

Dinamani Kanchipuram

|

May 29, 2025

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பதே சமூக நீதி. இந்தக் கோட்பாட்டைத் தனது மனநிலையாகக் கொண்டவரே துறவி. அதனால்தான் சமுதாயத்தில் துறவி பெருமதிப்பு பெறுகிறார்.

- கோதை ஜோதிலட்சுமி

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க, அஷ்ட ஐஸ்வரியங்களோடும் நீடு வாழ்க என வாழ்த்துவது இந்திய மரபு. வளமான வாழ்க்கை உயர்ந்தது என்ற சிந்தனை இருப்பதாலேயே அப்படிப் பெரியோர்கள் ஆசி வழங்குகிறார்கள். செல்வச் செழிப்போடு வாழ்கிறவர்கள் சமுதாயத்தில் மதிப்புடன் நடத்தப்படுகிறார்கள்.

பட்டினத்தடிகள் வாழ்வில் ஒரு சம்பவம் உண்டு. பட்டினத்தடிகள் மன்னர்களுக்கே பொருளுதவி செய்யும் அளவிலான செல்வந்தர். செல்வத்தைச் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரது வளர்ப்புப் பிள்ளை, 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்று சொன்னதைக் கேட்ட வினாடியில் அனைத்துச் செல்வங்களையும் விடுத்து துறவியாகிறார். கோயில் மண்டபங்களில் அமைதியாய் வாழ்கிறார். பிச்சையெடுத்து உண்கிறார்.

இதனை அறிந்த மன்னர் பட்டினத்தடிகளைத் தேடி வருகிறார். கோயில் மண்டபத்தில் அமர்ந்திருந்த அடிகளை வணங்குகிறார். மன்னரைக் கண்டு புன்னகைக்கிறார் அடிகள். மன்னர் கூப்பிய கைகளோடு 'ஐயா, தாங்கள் இப்படிச் செய்யலாமா?, இப்படி துறவுகொள்வதால் தங்களுக்கு என்ன கிடைத்தது?, எதை அடைந்தீர்கள்? என்று வினவுகிறார். மலர்ந்த முகத்துடன் அடிகள், 'நான் இருக்க நீர் நிற்க', என்று பதில் சொல்கிறார்.

அதாவது அரசனாக நாடாள்பவர் துறவிக்கு முன்னே பணிந்து நின்று வணங்குவது என்ற மரியாதை துறவின் தனிச்சிறப்பு. செல்வத்தோடு வாழ்வது சிறப்பு என்று ஆசி வழங்கும் தேசத்தில் எந்தச் செல்வமும் எனக்குத் தேவையில்லை என்று துறந்துவிட்ட ஒருவரை எல்லாவற்றினும் உயர்வான உன்னத நிலையில் வைக்கிறோம்.

துறவு மேற்கொள்பவர் தனது உறவுகளை, உறவுக்கான பொறுப்புகளைத் துறந்து வெளியேறுகிறார். என்றாலும் அவரை தேசம் கொண்டாடுகிறது ஏன்? எதனால் செல்வந்தர்களை, அரசாள்பவர்களைவிடத் துறவி உயர்ந்தவர்? எதன் அடிப்படையில் துறவி இத்தகைய மரியாதையைப் பெறுகிறார்?

துறவி எதனிடத்திலும் பற்றுக்கொள்ளாமல் புலன்களை அடக்கி மனநிறைவு கொண்டவராக மனிதர்கள் மட்டுமல்லாது, அனைத்து ஜீவன்களையும் சமமாகப் பார்க்கிறார். எல்லா உயிர்களையும் ஒன்றெனக் காணும் பார்வை அவருக்கு வாய்க்கப் பெறுகிறது.

Dinamani Kanchipuram

यह कहानी Dinamani Kanchipuram के May 29, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Kanchipuram से और कहानियाँ

Dinamani Kanchipuram

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Kanchipuram

தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Kanchipuram

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Kanchipuram

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinamani Kanchipuram

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு

முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து

time to read

1 min

May 19, 2026

Dinamani Kanchipuram

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Kanchipuram

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size