कोशिश गोल्ड - मुक्त
எண்ம வியூகம்!
Dinamani Dindigul & Theni
|November 01, 2025
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்குப் பிறகு, அரசியல் கூட்டங்களுக்குத் திரண்டு வரும் தொண்டர்கள் இனி தேவை இல்லை. ‘ஃபாலோயர்கள்' (பின்பற்றுபவர்கள்) என்று சொல்லக்கூடிய இணைய செல்வாக்கு மட்டுமே போதுமானது; அரசியல் சந்தை அமோகமான வணிகச் சலசலப்புடன் உச்சம் தொடும்.
அரசியல் தலைவர்கள் ஓர் அறிக்கையை வெளியிட, சமூக ஊடகத்தில் சிறு பதிவிட்டால் போதும், அடுத்த விநாடியே அது லட்சக்கணக்கான மக்களை மின்னல் வேகத்தில் சென்றடைந்து விடுகிறது. சில தலைவர்கள் தங்கள் அறைக்குள் இருந்து கொண்டே சமூக ஊடகங்களில் அடிக்கடி நேரடியாகக் காட்சியளித்து உரையாற்றுகிறார்கள். அவர்கள் மேல்மட்டத் தலைவர்கள் முதல் கடைக்கோடித் தொண்டர்கள் வரை அனைவரிடமும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
தலைவர்கள் இப்போது வெறும் அரசியல்வாதிகள் அல்லர்; அவர்கள்தாம் அந்தந்தக் கட்சிகளின் விளம்பரத் தூதர்கள். ஆரோக்கியக் குறிப்புகள், வாகன விபத்தில் சிக்கியவரை மீட்க நீளும் உதவிக்கரங்கள், பொது மக்களுடன் ஒருவராகத் தேநீர் அருந்தும் எளிய காட்சிகள், பண்டிகைக்குப் பகிரப்படும் அழகான வாழ்த்துச் செய்திகள் ... இவை அனைத்தும் எதற்காகத் தெரியுமா? ஓர் எளிய, நெருக்கமான பிம்பத்தைக் கட்டமைக்கத்தான். இந்த எண்ம (டிஜிட்டல்) அலங்காரம்தான் இப்போது தலைவர்களுக்கான பிரம்மாண்டமான ஒப்பனையாகிவிட்டது.
यह कहानी Dinamani Dindigul & Theni के November 01, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dindigul & Theni से और कहानियाँ
Dinamani Dindigul & Theni
ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
May 20, 2026
Dinamani Dindigul & Theni
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்
அமெரிக்கா ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Dindigul & Theni
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Dindigul & Theni
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Dinamani Dindigul & Theni
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Dindigul & Theni
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Dindigul & Theni
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Dindigul & Theni
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Listen
Translate
Change font size

