मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

நீதி தேவன் மயக்கம் தெளிய வேண்டும்!

Dinamani Dindigul & Theni

|

July 31, 2025

உச்சநீதிமன்ற உள் விசாரணையை எதிர்த்தும், தலைமை நீதிபதி அனுப்பிய பரிந்துரையை எதிர்த்தும் நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்துள்ளார். தங்களுக்கு எதிரான வழக்கை தாங்களே விசாரிப்பது உச்சநீதிமன்றம் இதுவரை கண்டதில்லை.

- உதயமு. வீரையன்

துவாக ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடும். அதிலும் நீதித் துறையில் ஊழல் என்றால் கேட்க வேண்டுமா? நாட்டின் அனைத்து வளர்ச்சிகளையும் அழித்துவிடும். தேசம் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக பின்னோக்கிச் செல்லத் தொடங்கி விடும். தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றங்களும், நீதிபதிகளும் மக்களின் நம்பிக்கைக்கு உரியதாகச் செயல்பட வேண்டும். எப்போதாவது, தவறு ஏற்படுமானால் வெள்ளைத் துணியில் கருப்பு மை பட்டதுபோல் எல்லோருக்கும் தெரிந்துவிடும்.

'நீதித் துறையில் ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகள் இடம்பெறுவது அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் ஒட்டுமொத்த நீதித் துறையின் நேர்மை மீதான நம்பிக்கையும் சிதைந்து விடும்' என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் 'நீதித் துறையின் சட்டபூர்வ தன்மை மற்றும் பொது நம்பிக்கையைப் பராமரித்தல்' என்ற தலைப்பில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஒவ்வொரு அமைப்பும் வலுவான நடைமுறையைக் கொண்டுள்ளபோதும் தொழில் முறையில் தவறான நடத்தை தொடர்பான பிரச்னைகளுக்கு உள்ளாகின்றன.

எப்போதாவது நீதித் துறைக்குள்ளும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற நடத்தைகள் பொதுமக்களின் நம்பிக்கை மீது எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இதற்கு எதிராக சரியான வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்.

அந்த வகையில், நீதித் துறையில் ஊழல், தவறான நடத்தைகள் தொடர்பான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும் போதெல்லாம் உரிய உடனடி நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது. மேலும், நீதிபதிகள் பணி ஓய்வு பெற்றவுடன் அரசில் நியமனங்களை மேற்கொள்வது அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பணி விலகுவது போன்றவற்றால் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்க வாய்ப்புள்ளது.

அதன் காரணமாக, பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவித அரசுப் பணியையும் ஏற்க மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டும். நீதித் துறையின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த உறுதிப்பாடு இருக்க வேண்டும்.

Dinamani Dindigul & Theni से और कहानियाँ

Dinamani Dindigul & Theni

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி

இங்கிலாந்து கோல் மழை

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size