कोशिश गोल्ड - मुक्त
மக்களின் செல்வாக்கை திமுக இழந்தது
Dinamani Dindigul & Theni
|July 30, 2025
மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டதாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
-
காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, ஜூலை 29:
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தையொட்டி பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து பேசி வரும் எடப்பாடி கே. பழனிசாமி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார்.
அவருக்கு சிவகங்கை மாவட்ட அதிமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பளித்தனர். கழனிவாசல், செக்காலைச்சாலை, பெரியார் சிலை வழியாக காரைக்குடி, ஐந்துவிளக்குப் பகுதி எம்.ஜி.ஆர். சிலை உள்ள பகுதியில் பிரசார வாகனத்திலிருந்து எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:
காரைக்குடிக்கு ஒரு வரலாறு உண்டு. பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவி இந்தப் பகுதி மக்களுக்கு கல்வியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான நிலங்களையும் வழங்கிய வள்ளல் அழகப்பர் வாழ்ந்த பூமி இது. அழகப்பா பல்கலைக்கழகம், மத்திய மின் வேதியியல் ஆய்வகம் போன்றவை உள்ளதும் செட்டி நாடு என்று பெருமையோடும் அழைக்கப்படும் பகுதிதான் காரைக்குடி. இந்தப் பகுதியில் வணிகப் பெருமக்கள் நிறைந்திருக்கிறார்கள். அழகான கட்டடக் கலையுடன்கூடிய வீடுகள் நிறைந்த பகுதியாகும்.
காரைக்குடி, தற்போது மாநகராட்சியாக உள்ளது. இங்குள்ள மேயர் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை வணிகப் பயன்பாட்டுக் காக தனியாருக்கு குறைந்த வாடகையில் குத்தகைக்கு விட்டார். மேலும், மாநகராட்சியில் தீர்மான விவாதம் இல்லாமலேயே சுமார் ரூ. 30 கோடிக்கு ஒப்பந்தப்பணியை விட்டிருக்கிறார்.
எனவே, வருகிற பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த விவகாரத்தையும், மக்களாகிய நீங்கள் வைக்கும் கோரிக்கையையும் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.
यह कहानी Dinamani Dindigul & Theni के July 30, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dindigul & Theni से और कहानियाँ
Dinamani Dindigul & Theni
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Translate
Change font size

