कोशिश गोल्ड - मुक्त

இலைத்தலைவர் உருட்டிவிட்ட குண்டு பற்றி சொல்கிறார் wiki யானந்தா

Dinakaran Nagercoil

|

November 02, 2025

நாட்டாண்மை வருகையால் யூனியன் மலராத கட்சிப் பிரதிநிதிகள் அச்சத்தில் இருக்காங்களாமே.." எனக்கேட்டார் பீட்டர் மாமா.

"ஆன்மிக பூமியான புதுச்சேரியில் மலராத கட்சியில் கோஷ்டி 'யூனியன்' உள்ளதாம்.. இதனால் ஆட்சியை முழுமையாக்க முடியாமல் திணறிய புல்லட்சாமி, பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளாராம்.. இதனால் ஆடிப் போன உள்ளூர் தாமரைகள் பவர்புல் மேலிடத்தில் பிரச்னை பூதாகரமாவதாக முறையிட, நாட்டாண்மை அனுப்புவதாக உறுதி தரப்பட்டுள்ளதாம்.. இப் பஞ்சாயத்தில் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுண்ணு தீர்ப்பு இருக்கும் வகையில் பார்வையாளர் வருகை இருக்கலாம் என்ற தகவலால் மலராத கட்சி பிரதிநிதிகளிடம் அச்சம் நிலவுகிறதாம்.. ஏற்கனவே மாற்று அணியில் சேர்ந்து பரிசுகளை வெளிப்படையாக பெற்ற பிரதிநிதிகள் கட்சியிலிருந்து தூக்கி எறியப்படலாம் என்பதால் யூனியன் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு இருக்காம்.. இதுபற்றிதான் பரவலாக பேச்சு.." என்றார் விக்கியானந்தா.

"சென்ட்ரல் தம்பியும், ஸ்டேட்ல அண்ணனும் பார்த்துக்கொள்வாங்க என்பதுதான் இலை கட்சியில் வைரலாகும் கோஷமாமே.." என்றார் பீட்டர் மாமா.

"புரம் மாவட்டத்தில் இலை கட்சி மாஜி அமைச்சர் தனது சகோதரரை முழுநேர அரசியல் களத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.. ஏற்கனவே கட்சி தொலைக்காட்சி நிர்வாகத்தை கவனிக்கும் அவர் தனது இல்ல திருமணத்தில் இபிஎஸ் பங்கேற்றபோது, முழுநேர அரசியல் களத்திற்கு தனது சகோதரரை களமிறக்கும் தகவலை காதில் போட்டாராம்.. இதனால் தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே வந்து தலைகாட்டிய சகோதரரை இனிமேல் முழுநேர அரசியலில் பார்க்க முடியுமாம்.. புரம், மயில் தொகுதியில் ஏதாவது ஒன்றில் போட்டியிடும் முடிவில் உள்ளாராம்.. இதற்காகவே இபிஎஸ் உட்கார்ந்த இருக்கைக்கு அருகிலேயே சகோதரரின் கையை பிடித்து அமர வைத்து மாஸ் காட்டினாராம் ராஜ்ய சபா ஆனவர்.

Dinakaran Nagercoil से और कहानियाँ

Dinakaran Nagercoil

மக்களின் உரிமைக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசு விஜய் கண்டனம்

மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

time to read

1 min

November 03, 2025

Dinakaran Nagercoil

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 3வது சுற்றுக்கு புதிதாக 650 எம்பிபிஎஸ் இடங்கள்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்கு 3ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 550 கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்களையும், புதிய தனியார் மருத்துவப் பல்கலைக்கழகமான தக்ஷஷிலா மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களையும் அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 2025ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 9,950 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டுக்கான சேர்க்கையை தொடங்கியபோது, அரசுக் கல்லூரிகளில் 5,200 மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 4,000 என 9,200 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருந்தன.

time to read

1 min

November 03, 2025

Dinakaran Nagercoil

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் ஜெனிஸ் டிஜென் சாம்பியன்

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் ஜெனிஸ் டிஜென் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

time to read

1 min

November 03, 2025

Dinakaran Nagercoil

மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு தகுதியுடைய வாக்காளர் ஒருவர் கூட நீக்கப்படக்கூடாது

தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:

time to read

1 min

November 03, 2025

Dinakaran Nagercoil

இந்திய ரயில்வேயில் கீழ் பெர்த்தில் முன்பதிவு விதிகளில் புதிய மாற்றங்கள்

பெண்கள், முதியவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை

time to read

1 min

November 03, 2025

Dinakaran Nagercoil

கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவ.2ம் தேதி அதிகரித்த வெப்பம்

மேற்கு திசையில் இருந்து வறண்ட வெப்பக் காற்று வீசுவதால் நவம்பர் மாதத்தில் 26 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச வெப்பம் நேற்றுமுன்தினம் பதிவாகியுள்ளது.

time to read

1 min

November 03, 2025

Dinakaran Nagercoil

பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஐ.டி. விங்க் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதிமுக ஐ.டி.விங்க் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

November 03, 2025

Dinakaran Nagercoil

மேட்டுப்பாளையம் அருகே பயங்கரம் மருமகளின் கள்ளக்காதலனை கொன்று தீவைத்து எரித்த நகராட்சி கவுன்சிலர்

ஒன்றரை வருடங்களுக்கு பின் 2 மகன்களுடன் கைது

time to read

2 mins

November 03, 2025

Dinakaran Nagercoil

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி

இன்று பனையூர் செல்லும் சிபிஐ விஜய்யிடம் விசாரணையா?

time to read

1 mins

November 03, 2025

Dinakaran Nagercoil

எஸ்.எல்.வி.-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்... முதல்பக்கத் தொடர்ச்சி

ஸ்டெஜ், சி 25 என்ற கிரையோ ஜெனிக் ஸ்டேஜ் ஆகியவை ஆகும். இந்த செயற்கைக் கோள் இந்திய ராணுவத் தின் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தல், எல்லை கண்காணிப்புக்கான உயர்தர தகவல் இணைப்பு, கடற்படைக்கான பாதுகாப்பு தகவல் பரிமாற்றம், செயற் கைக்கோள் வழி வழிகாட்டும் (Navigation) சேவைகள் வழங் குகிறது. முதன்முதலில் 2014ம் ஆண்டு டிசம்பரில் எல்.வி.எம்- 3 ஆபரேஷனல் ஃபிளைட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து செயற்கைக்கோள் ஏவுதல் வெற்றிகரமாகவே அமைந் துள்ள நிலையில், தற்போது 5வது மிஷன் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

time to read

1 mins

November 03, 2025

Listen

Translate

Share

-
+

Change font size