कोशिश गोल्ड - मुक्त
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்
DINACHEITHI - MADURAI
|May 26, 2025
தி.மு. கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
-
மாநில துணைச் செயலாளர்கள் எஸ். ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா. இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ. பிரகாஷ், பிரபு கஜேந்திரன், பி.எஸ். சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி. ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் திருச்சியில் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1: பெகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி மக்களுக்கு, அஞ்சலி
பெகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி பொது மக்களுக்கும், ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளும் கழக இளைஞர் அணி நிர்வாகிகளின் இந்தக் கூட்டம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு, பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
‘மக்கள் பிரதிநிதிகளால் நடத்தப்படும் சட்டப் பேரவையைவிட, ஆளுநர் என்பவர் மேலானவர் அல்ல' என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலவரம்பை நிர்ணயம் செய்ததுடன், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய 10 மசோதாக்களுக்கும், ஒப்புதல் வழங்கிய மாண்பமை உச்சநீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களின் உரிமைகளையும் நிலைநாட்டும்வகையில், இந்திய நீதித்துறை வரலாற்றில், முன் உதாரணமான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பைப் பெற்றுத்தந்த கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்தக் கூட்டம், பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 3: கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமாகச் செயல்படும் அரசியல் சக்திகளுக்குக் கண்டனம்
உரிமைகளுக்கான மைல்கல்லாக விளங்கும் மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர், ஆகியோரைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய அரசையும், மாண்பமை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையேகேள்விக்குறியாக்கும் விதமாக குறுக்கு வழியை நாடும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமான சக்திகளையும், இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
यह कहानी DINACHEITHI - MADURAI के May 26, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - MADURAI से और कहानियाँ
DINACHEITHI - MADURAI
வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
1 min
January 06, 2026
DINACHEITHI - MADURAI
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்
தேர்தல் ஆணையம் தகவல்
1 mins
January 06, 2026
DINACHEITHI - MADURAI
சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
1 min
January 06, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்
இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
DINACHEITHI - MADURAI
முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
2 mins
January 04, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்
லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்
1 mins
January 04, 2026
DINACHEITHI - MADURAI
வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்
டிரம்ப் அதிரடி அறிவிப்பு
1 min
January 04, 2026
DINACHEITHI - MADURAI
வீர மங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு
வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:- மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, 'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களும்.
1 min
January 04, 2026
DINACHEITHI - MADURAI
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விபத்தில் உயிர் இழந்தால் ரூ. 1 கோடி
முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
January 04, 2026
DINACHEITHI - MADURAI
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்
அதிகாரிகள் தகவல்
1 min
January 03, 2026
Translate
Change font size
