मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு கருத்துக் கணிப்பு சொல்லுவது என்ன?

DINACHEITHI - KOVAI

|

June 22, 2025

சென்னை ஜூன் 22சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்துகணிப்புகளை நடத்தி உள்ளது.

மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு கருத்துக் கணிப்பு சொல்லுவது என்ன?

234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் கடந்த 17 -ந்தேதி வரை 150 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 70,922 பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு :-

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று 73.30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரான அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் முதலமைச்சராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த படியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் முதல்வராக 30.80 சதவீதம் பேரும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராக 19.97 சதவீதம் பேரும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு 17.38 சதவீதம் பேரும், டி.டி.வி. தினகரனுக்கு 16.29 சதவீதம் பேரும், திருமாவளவனுக்கு 14.71 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

வருகிற தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள அரசியல் கட்சி எது என்கிற கேள்விக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று 80.74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்? என்கிற கேள்விக்கு அண்ணாமலை முதலிடத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 2-வது இடத்தில் விஜய், 3-வது இடத்தில் உதயநிதி, 4-வது இடத்தில் சீமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

DINACHEITHI - KOVAI से और कहानियाँ

DINACHEITHI - KOVAI

மோசடிகளை தடுப்பதே நோக்கம்

இந்தியா முழுவதும் 2 கோடி பெயர்கள் நீக்கம்

time to read

1 min

November 27, 2025

DINACHEITHI - KOVAI

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பேட்டி

டிச.4-ந்தேதிவரை விண்ணப்பங்கள் கொடுக்கலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை. என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா நேற்று தெரிவித்தார்.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - KOVAI

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார், சூர்யகாந்த்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பேருந்து விபத்தில் 8 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஜி 20 உறுப்பு நாடுகள் மாநாடு : தலைவர்களை சந்தித்தார், பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - KOVAI

தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது

“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 mins

November 24, 2025

DINACHEITHI - KOVAI

“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு

தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும், என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி வருமாறு :-

time to read

1 min

November 23, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானம் எரிந்து கீழே விழுந்தது

துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி கடந்த நவ. 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவ. 21) சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் பெருமைமிகு தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. துபை விமான நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 22, 2025

DINACHEITHI - KOVAI

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரோடுஷோ பற்றிய வரைவு வழிகாட்டு விதிமுறைகள்

தமிழ்நாடு அரசு தாக்கல்

time to read

1 min

November 22, 2025

Translate

Share

-
+

Change font size