कोशिश गोल्ड - मुक्त
ரூ.52 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்
DINACHEITHI - CHENNAI
|July 04, 2025
சென்னை ஜூலை 4தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(3.7.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு,சாஸ்திரி நகரில்நடைபெற்றநிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ளமாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 52 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.
-
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்" சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்- 48" போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7.5.2022 அன்று சட்டப்பேரவை விதி எண் 110 கீழ், தமிழ்நாடு மக்களின் சுகாதாரத் தேவைகளை மென்மேலும் மேம்படுத்திடும் விதத்தில் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப் போல, நகர்ப்புறங்களில் மக்கள் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் 177 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் படி முதல்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 6.6.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன. அதன் இரண்டாம் கட்டமாக, 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 இலட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. மேலும், அடையாறு, சாஸ்திரி நகரில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார்.
यह कहानी DINACHEITHI - CHENNAI के July 04, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - CHENNAI से और कहानियाँ
DINACHEITHI - CHENNAI
மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற திமுக மகளிருக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது.
1 min
May 16, 2026
DINACHEITHI - CHENNAI
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் விஜய் கோரிக்கை
சென்னை, மே. 16- \"பொது மக்களையும், தொழில் வளர்ச்சியையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்., என்று, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
May 16, 2026
DINACHEITHI - CHENNAI
பொது மக்களையும், தொழில் வளர்ச்சியையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்
சென்னை, மே. 16- \"பொது மக்களையும், தொழில் வளர்ச்சியையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்., என்று, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
May 16, 2026
DINACHEITHI - CHENNAI
அதிமுகவின் கொறடா யார்? சபாநாயகர் ஜே.சி. பிரபாகர் விளக்கம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
DINACHEITHI - CHENNAI
முதல்-அமைச்சர் விஜய்யுடன் இந்திய தொழிற் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சந்திப்பு
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை நேற்று தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் பி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர் சி.தேவராஜன், துணைத் தலைவர் ஜெ. முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் எம். பொன்னுசாமி, தமிழ்நாடு முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், தமிழ்நாடு இயக்குநர் & தலைவர் பி.ஜெய்கிருஷ்ணன் & நிர்வாகிகள் சந்தித்தனர்.
1 min
May 16, 2026
DINACHEITHI - CHENNAI
அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறும்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
1 min
May 16, 2026
DINACHEITHI - CHENNAI
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தம்? - தமிழக அரசு விளக்கம்
கடந்த திமுக அரசின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வந்தனர்.
1 min
May 15, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு நேற்று அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 60 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
1 min
May 15, 2026
DINACHEITHI - CHENNAI
முந்திய ஆட்சியில் வழங்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும்
முதல் - அமைச்சர் விஜய் அறிவிப்பு
1 min
May 15, 2026
DINACHEITHI - CHENNAI
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
May 15, 2026
Translate
Change font size
