Essayer OR - Gratuit
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan
|October 01, 2024
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
"உடலைத் தன் வசமாக்கிக்கொண்டி ருக்கும் ஒருவன், புலன்களை அடக்கியாள முடிந்த ஒருவன், உலக உயிர்களனைத்தும் ஆன்ம சொரூபமே என்று தெளிவடைந்த ஒருவன், உலகியல் கர்மங்களில் ஈடுபட் டாலும், நிச்சயமாக அவன் கறை படிந்தவ னாக ஆவதில்லை." சரீரம் என்ற ஒன்றை உணர்ந்தவன், அதுவே தான் மற்றும் எல் லாம் என்ற உணர்வுக்கும் ஆட்படுகிறான். உலகியல் வாழ்க்கையில் சரீரத்தை முன்னி றுத்தவேண்டியது அவசியமாகிறது. அதுவே அடையாளமாகவும் ஆகிறது.
ஆனால் மேம்போக்கான, வெளிப்படை யான செயல்களுக்குப் பயன்படும் அந்த சரீரத்துக்குள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க நாம் யாருமே விழைவதில்லை. உடலைச் செயல்பாட்டுக்கான ஒரு கருவி என்றே எடுத்துக்கொள்வோம்.
அந்த உடலுக்குள் உறுப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை வேண்டுமானால் விஞ்ஞானம் சோதனை ரீதியாக விவரிக்க லாமே தவிர, அவற்றை இயக்குவது எது என்ற கேள்விக்குப் பெரும்பாலும் பதில் கிடைப்பதில்லை.
விழுங்கும் ஆகாரம் எப்படி செரிக்கி றது, அவ்வாறு செரிக்கும் ஆகாரத்திலிருந்து நன்மை தரும் சத்துகளையும், வேண்டாத வற்றையும் பிரிக்கும் சக்தி இரைப்பைக்கும், ஈரலுக்கும் எப்படி வந்தது? வேண்டாத வற்றை வெளியேற்றும் பொறுப்பைக் குடல் எப்படி வெகு இயல்பாகச் செய்கிறது, இது பகலில் மட்டுமா, அதாவது நாம் விழித்திருக் கும்போது மட்டுமா, இரவிலும் கூடத்தான் நடக்கிறது.
அதாவது நாம் நிம்மதியாக ஓய்வு எடுத் துக் கொள்ள, நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் நமக்கு உறுதுணையாக நிற் கின்றன. நம் தூக்கத்திலும் ரத்த ஓட்டம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதயம் ரத்தத்தை வாங்கி, வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நுரையீரல் சுவாசித்து கொண்டுதான் இருக்கிறது.
இவற்றையெல்லாம் இயக்குவது யார் அல்லது எது?
கைகளை அசைக்கிறோம், கால்களை இயக்குகிறோம். அவற்றில் அமைந்திருக் கும் மூட்டுகளுக்கு எண்ணெய் போட்டு அவற்றை இலகுவாக இயங்கவைக்கும் மெக்கானிக் யார் அல்லது எது?
லௌகீகமாக இப்படி நம் உடற்கூறு களை நாம் ஆராய முற்படும்போது நமக்கு ஓர் உண்மை புலப்படும். நம்மை இயக்குப வர், நம்மை நாமாக உலவவிடுபவர், அந்தப் பரமாத்மா அன்றி வேறு எவரும் இலர். ஆகவே, நம் சரீரத்தைத் தவிரவும் வேறு ஏதோ ஒன்றும் நமக்குள் இருக்கிறது.
அது நம் அறிவுக்கு அப்பாற்பட்டது என்று விலகுபவர், அனுபவங்களின் பலன்களை
Cette histoire est tirée de l'édition October 01, 2024 de Aanmigam Palan.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Aanmigam Palan
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size
