Essayer OR - Gratuit
ஒரு கைது ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள்
Tamil Mirror
|August 26, 2025
நாட்டில் நீதியை நிலைநாட்ட வேண்டும்.
ஊழலை ஒழிக்க வேண்டும், ஆட்சியாளர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும், கடத்தல்கள் கொலைகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எல்லாக் கட்சிகளும் மக்களும் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.
இவ்வாறான பேர்வழிகள் கைது செய்யப்படும் போது, அரசியலரங்கில் ஒரு சலசலப்பு இருக்கும். அவர் சார்ந்தவர்கள் விமர்சிப்பார்கள். அந்தக் கைதில் மகிழ்ச்சியடைபவர்கள் அதிகமாக இருப்பதைக் கண்டிருக்கின்றோம். ஆனால், மக்களையும் உள்ளடக்கியதான ஒரு அதிர்வு பெரும்பாலும் ஏற்படுவதில்லை.
கைது செய்யப்பட்டவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என தெரிந்திருந்தும், அதனையும் மீறிய அனுதாபம் ஒன்று வெளிக் கிளம்புவதும் குறைவு. ஆனால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமிங்க விடயத்தில் இப்படியான அபூர்வ பிரதிபலிப்புக்கள் வெளிப்பட்டுள்ளன என்றுதான் தெரிகின்றது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது, இடைநடுவில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்காக இங்கிலாந்து சென்றார் என்றும், இந்த வகையில், தான் உள்ளிட்ட குழுவினரின் இந்தப் பயணத்திற்காக ரணில் ஒரு கோடி அறுபத்தி ஒன்பது இலட்சம் அரச நிதியைச் செலவிட்டு; ள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு வெள்ளிக்கிழமை சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு, அங்கு வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் ரணில். நீதிமன்றம் வழங்கிய விளக்கமறியல் உத்தரவுக்கமைய வைக்கப்பட்ட அவர், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிசிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தப் பின்னணியில் ரணிலைச் சுற்றியே இன்றைய நிலைமைகள் வட்டமிடுகின்றன.
சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. குற்றம் யார் இழைத்திருந்தாலும் தண்டனை பெற்றே ஆக வேண்டும். பொதுச் சொத்துக்களை யார் தவறாக பயன்படுத்தியிருந்தாலும், அவர் தகுதி தராதரம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஊழல், கொலை, அட்டூழியங்கள் செய்தவர்கள் விடயத்தில் பாவம் புண்ணிம் பார்க்க முடியாது சட்டம் படித்த ரணிலுக்கும் இது தெரியும்.
Cette histoire est tirée de l'édition August 26, 2025 de Tamil Mirror.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
