Essayer OR - Gratuit
அழகிய தேவதையே அருகே வா...
Tamil Mirror
|June 26, 2025
"அப்பா இன்று ஓர் ஆய்விற்காக அரவிந், சுமித்துடன் வெளில போறன் வந்ததும் கதைக்கிறன்” வினோத் அப்பாவிடம் தொலைபேசியில் வெளியூர் போவதைப்பற்றி கூறி விட்டு தொலைபேசியை அணைத்து விட்டான்.
பல்கலைக்கழகத்தில் அறிமுகமான நண்பர்களே அரவிந், சுமித் பல்கலைக்கழகத்தில் பாடம் சம்மந்தமாக காட்டுப்பகுதியில் இருக்கும் பறவை விலங்குகளின் வாழ்வியல் தொடர்பான ஆய்விற்காக செல்வதாக புறப்பட்டார்கள்.
அரவிந்தின் அப்பா தனக்காக பாவிக்கு ஜீப் வண்டியில் அவர்கள் மலைகள் சூழ்ந்த காட்டுப்பகுதியையே தமது ஆய்விற்காக தேர்ந்தெடுத்திருந்தார்கள். "மச்சான் வினோத் நாங்க போற மலைக் கிராமங்களில் அழகான பெண்கள் இருக்கிறாங்களோ?" சுமித் மிக ஆவலாக கேட்க இரு நண்பர்களும் ஹ...ஹ...ஹ... என்றே சிரித்து விட்டனர். "இல்ல மச்சான் அங்க அழகிய தேவதைகளே இருக்குதாம் நீ பாக்கலாம்... மீண்டும் சிரிப்பு.
மலை வளைவுகள் நெளிய நெளிய "செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா...அம்மம்மா... ஆனந்தம்... வினோத் ஜீப்பிலிருந்து இயற்கையை ரசித்தபடியே பாடிக்கொண்டுவர... அவர்கள் வரவேண்டிய காட்டுப் பகுதியும் வந்தது..ஓங்கி உயர்ந்த இராட்சத மரங்கள், மலைப்பாம்புகளா என அச்சமூட்டும் கொடிகள் கத்தல், கீச்சிடல், ஓலம் என அத்தனை மாயாஜால ஒலிகளையும் ஒன்றாக இசையமைத்தது காடு... அவர்களின் ஆராய்ச்சி வேலைகளை வெகு விரைவாக செய்து கொண்டிருந்தார்கள் மாலை ஐந்து மணிக்குள் காட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும். காட்டிலாக்கா அதிகாரிகளின் கட்டளை...
"டேய் மச்சான் வெளிக்கிடுவம் ஜீப்பும் நீரோடைக்கு கிட்ட நிப்பாட்டியிருக்கு அதையும் பரிசோதித்து எரிபொருளை நிரப்பி ஆயத்தப்படுத்த வேணும். * பேசிய வண்ணமே நீரோடைக்கருகில் வந்தவர்களுக்கு பேரதிர்ச்சி ஜீப் வண்டி தலைகீழாக கிடந்தது.
யானைக் கூட்டமே அவ்விடத்தை கடந்த தடயங்கள் தெரிந்தது.
மிகப் பிரயத்தனம் செய்து ஜீப்பை நிமிர்த்தினார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக என்ஜின் இயங்கவே இல்லை.
"என்னடா மச்சி செய்வம்" "இருட்டிறதுக்கிடையில் பக்கத்தில ஆட்கள் இருக்கிற இடமாக போவம் நாளை வண்டிய எடுக்க ஆட்களை செட் பண்ணுவம்." இருள இருன திக் திக நிமிடங்கள் அவர்களுக்காகவே காத்திருந்தது.
அந்த காட்டுப் பகுதியில் வெளியுலகத்துடன், தொடர்பில்லாத ஒரு கிராமம் இருந்தது.
அந்தக் கிராமத்திற்குள் நுழையவர்கள் யாரும் உயிருடன் வெளியே வந்ததில்லை.
அந்தக் கிராமத்தைப் பற்றிய பயங்கரமான கதைகள் தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட்டு வந்தன.
Cette histoire est tirée de l'édition June 26, 2025 de Tamil Mirror.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
