Essayer OR - Gratuit

அமைச்சர் அர.சக்கரபாணி, ஒட்டன்சத்திரத்தில் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்

Now Indiar Times

|

June 04, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்கள்.

அமைச்சர் அர.சக்கரபாணி, ஒட்டன்சத்திரத்தில் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்

அதனைத்தொடர்ந்து, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஒட்டன்சத்திரத்தில் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கல்வி மற்றும் சுகாதாரம் இவை இரண்டும் தனது இரண்டு கண்கள் என்று கூறி எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு சுமார் ரூ.47,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும் உயர் கல்வித் துறைக்கு சுமார் ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

PLUS D'HISTOIRES DE Now Indiar Times

Now Indiar Times

Now Indiar Times

செம்மறி ஆடு மற்றும் முயல் வளர்ப்பு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மூலம் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்க நிகழ்ச்சி பல்வேறு கிராமங்களில் காரிப் பருவத்திற்கான வேளாண் தொழில்நுட்பங்கள், கால்நடை சார்ந்த தொழில்நுட்பங்கள் வேளாண் சார்ந்த திட்டங்கள் குறித்து விஞ்ஞானிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, அதனை முன்னிட்டு அடைக்கம்பட்டி, தேக்கம்பட்டி மற்றும் எம்.சுப்பலாபுரம் கிராமத்தில் செம்மறி ஆடு மற்றும் முயல் வளர்ப்பு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

time to read

1 min

June 06, 2025

Now Indiar Times

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் எம்.எல். ஏ.வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி புனித தோமையார் மலை தெற்கு ஒன்றியம் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகாரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

time to read

1 min

June 06, 2025

Now Indiar Times

அண்ணாமலையார் கோவிலில் ரூ.500 கட்டணத்தில் தரிசனம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் சமீப காலமாக தரிசனம் செய்யவும் கிரிவலம் வரவும் பக்தர்களின் வருகை அதிரித்துள்ளது. வார நாட்களில் 2 மணிநேரமும் வார இறுதி நாட்களில் 4 மணிநேரம் முதல் 5 மணிநேரமும் பவுர்ணமி நாட்களில் சுமார் 6 மணிநேரத்திற்கு மேலாகவும் வரிசையில்காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

time to read

1 min

June 06, 2025

Now Indiar Times

Now Indiar Times

ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் உட்கட்டமைப்புகள் பசுமை சூழலோடு தரம் உயர்த்தப்பட்ட பசுமைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் தொடங்கி வைத்து பார்வையிட்டார்

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் (4.6.2025) திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் கொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பாக ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் உட்கட்டமைப்புகள் பசுமை சூழலோடு தரம் உயர்த்தப்பட்ட பசுமைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். சுதர்சனம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வை யிட்டார்கள்.

time to read

1 min

June 06, 2025

Now Indiar Times

அமெரிக்க டாலரை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.9.4 லட்சம் மோசடி செய்த நபர் கைது. 1 செல்போன் மற்றும் 2 சிம்கார்டுகள் பறிமுதல்

சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 22.08.2024 தேதி ரப்பானிகான், ஆ/வ26, த/பெ.சபீர்கான் என்பவர் அளித்த புகாரில், புகார்தாரர் Binance: BTC, Crypto and NFTS App ல் USDT சம்மந்தமாக டெலிகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த ஒரு கைப்பேசி எண்ணில் பேசியதாகவும், அதில் பேசிய ஒரு நபர் அமெரிக்க டாலரை நேரடியாக Exchange ல் வாங்குவதை விட குறைவான விலைக்கு தருவதாக கூறியதை நம்பி புகார்தாரர் மேற்படி நபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அமெரிக்கா டாலர் வாங்குவதற்காக RTGS மூலம் மொத்தம் ரூ.9,40,000/ அனுப்பியதாகவும், பின்னர் மேற்படி நபர் மனுதாரருக்கு அமெரிக்கா டாலரை கொடுக்காமல் ஏமாற்றியதால் புகார்தாரர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மேற்படி மோசடி நபர் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டுத்

time to read

1 min

June 06, 2025

Now Indiar Times

கிரைம் செய்திகள்

அமெரிக்க டாலரை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.9.4 லட்சம் மோசடி செய்த நபர் கைது. 1 செல்போன் மற்றும் 2 சிம்கார்டுகள் பறிமுதல்

time to read

1 min

June 06, 2025

Now Indiar Times

Now Indiar Times

தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்பு

மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் பந்தல் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

time to read

1 min

June 06, 2025

Now Indiar Times

ஆர்.கே. நகர் பகுதியில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி பண மோசடி செய்த நபர் கைது

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பப்பி, பெ/வ.35 என்பவர் தனது கணவர் மூலம் அறிமுகமான ஈஸ்வரன் மற்றும் கந்தகுமார் ஆகியோர் 2023ம் ஆண்டு தீபாவளி பண்டு சீட்டு நடத்துவதாகவும், தாங்கள் இத்திட்டத்தில் சேர்ந்தால் அதிக லாபம் பெறலாம் என்றும் கூறியதன்பேரில், தானும் தனக்கு தெரிந்த நபர்களும் இவர்களது தீபாவளி பண்டு சீட்டில் சேர்ந்து 2023ம் ஆண்டு நவம்பர் முதல் 2024ம் ஆண்டு ஜூன் வரை பணம் செலுத்தியதாகவும், தான் செலுத்திய பணம் ரூ.82,500/ உட்பட தனக்கு தெரிந்தவர்கள் சேர்ந்து மொத்தம் ரூ.1,62,000/ பணம் செலுத்தியும், சீட்டு முதிர்வடைந்த பின்னர் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கேட்டபோது, தராமல் ஏமாற்றி வந்ததாகவும், இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு தங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தரும்படியும் பப்பி என்பவர் பி6 ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

time to read

1 min

June 06, 2025

Now Indiar Times

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு

கோவை சாய்பாபா காலனி என்.எஸ். ஆர். சாலையில் புதுப்பிக்கப்பட்ட ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதனை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி. தங்கராஜ், ரெப்கோ வங்கியின் தலைவர் ஈ.சந்தானம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

time to read

1 min

June 06, 2025

Now Indiar Times

Now Indiar Times

பெங்களூரு காவல் துறை மீது மக்கள் அதிருப்தி

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குக் கூட கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என காவல்துறை மீது பாதிக்கப்பட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

time to read

1 mins

June 06, 2025

Translate

Share

-
+

Change font size