Essayer OR - Gratuit

மாணவ மாணிக்கங்கள்!

Dinamani Tiruvannamalai

|

July 04, 2025

நாம் யாருக்கும் பாரமாக வாழாமல் உயர்ந்த சிந்தனையை உருவாக்கிச் செயல்பட வேண்டும். இன்று நம் நாட்டில் அனைத்தும் இருந்தும் சுயநல சிந்தனைதான் நம்மை சிதிலமடைய வைக்கிறது. அதை மாற்ற நம் சிந்தனையை உயர்வாக்கிச் செயல்படுவதன் மூலம்தான் எதிர்கால இந்தியாவைக் கட்டமைக்க முடியும்.

- க.பழனித்துரை

பள்ளி மாணவர்களுக்கான ஒரு பயிற்சி முகாம். நடைபெற்ற இடம் மாற்றுத் திறனாளிகளை தன்மானமிக்க திறனாளிகளாக உருவாக்கும் திருக்கோயிலாக செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம். தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்துக்கு அருகே அமைந்துள்ள ஒரு தவச்சாலை.

மாற்றுத் திறனாளிகளுக்கு புதுவாழ்வளிக்கும் இரண்டு மாமனிதர்களால் நடத்தப்படும் வேள்வி. அதைச் சென்று பார்க்கும் ஒவ்வொருவரையும் அந்த இரண்டு மாமனிதர்களும் வாழும் தெய்வங்கள் என்று வணங்க வைக்கும் செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர்கள். மற்றவர் துணையின்றி எந்தச் செயலையும் செய்ய இயலாத இரண்டு மனிதர்களும் கர்மயோகிகளாகச் செயல்பட்டு நம்பிக்கை ஒளியை அனைவருக்கும் தருகின்றார்கள்.

அந்த இடத்தில்தான் இந்த மாணவர்களுக்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முகாமில் பள்ளி மாணவர்கள் 85 பேர் தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர். அவர்களுடன் நானும் உரையாட வருகிறேன் என்று மத்திய, மாநில அரசுகளில் அரசுச் செயலராக பணிபுரிந்த ஓர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்த அதிகாரியும் வந்திருந்தார்.

இந்த முகாமில் அனைத்து வசதிகளுக்கான செயல்களையும் மாணவர்களே பொறுப்பேற்று நடத்தினர். அடுத்து, கருத்துரைஅனைத்தையும்உரையாடல்களாகவே வடிவமைத்து அந்த மாணவர்களின் உள் திறனை அவர்களுக்குக் காண்பித்தது முகாமின் மற்றொரு சிறப்பு.

இந்த மாணவர்களின் செயல்களைப் பார்த்த அந்த ஓய்வுபெற்ற அரசுச் செயலர், இவர்கள் என்னுடன் கேள்வி கேட்டு உரையாடட்டும் என்று கூறி, ஒட்டுமொத்தவகுப்பையும் கேள்வி-பதிலாக மாற்றிவிட்டார். முதல் அமர்வில் அவர்களிடம் உரையாடலைத் தொடங்கியவர் பல கேள்விகளை முன்வைத்தார். அதில் முதல் கேள்வி, நாம் வாழும் உலகம் இன்று மிகவும் சிறப்பாக, அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறதா?

சற்றும் தாமதிக்காமல் இல்லை என்று பதில் தந்தனர். அதற்கு என்ன செய்வது? மறு கேள்வி. அடுத்த பதில், அதை மாற்ற வேண்டும். யார் மாற்றுவது? அதற்கும் உடனே, நாம்தான் என்ற பதில். எப்படி? உடனே தலைமை ஏற்க வேண்டும்.

Dinamani Tiruvannamalai

Cette histoire est tirée de l'édition July 04, 2025 de Dinamani Tiruvannamalai.

Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.

Déjà abonné ?

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்

தற்சார்புதான் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Tiruvannamalai

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Tiruvannamalai

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்

அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

கத்தாரில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

முதல்வர் உத்தரவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை

அமெரிக்க வரி விதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு

ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size