Essayer OR - Gratuit
இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..!
Dinamani Tiruvannamalai
|May 15, 2025
இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும்தான் இருக்குமே தவிர, வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேசப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் தெளிவான மற்றும் உறுதியான மாற்றத்தை பிரதமர் மோடி முன்வைத்தார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ஆயுதப்படைகள் அண்மையில் நடத்திய துல்லியமான தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கடுமையான செய்தி தரப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையை அவர் தெளித்தெளிவாக எடுத்துரைத்தார்.
இனி பயங்கரவாதத்தை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்பதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' புதிய அணுகுமுறையையும், கொள்கையையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையை விளக்கிய அவர், அந்தக் கொள்கையின் மூன்று முக்கியக் கூறுகளை எடுத்துரைத்தார்.
இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குத் தகுந்த பதிலடி அளிக்கப்படும்; பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கிருந்து முளைத்தாலும், அந்த இடங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது முதல் கூறாகும்.
எந்தவொரு அணு ஆயுத மிரட்டலையும் இந்தியா சகித்துக்கொள்ளாது; அணு ஆயுத அச்சுறுத்தல் என்ற போர்வையின் கீழ் உருவாகும் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது இந்தியா துல்லியமாகவும், தீர்க்கமாகவும் தாக்குதல் நடத்தும் என்பது இரண்டாவது கூறாகும்.
அரசின் நிதியுதவியைப் பெறும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதத்தின் காரணகர்த்தாக்களையும் வெவ்வேறாக இந்தியா வித்தியாசப்படுத்தி பார்க்காது என்பது மூன்றாவது கூறாகும். அதாவது, பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை யான ஐ.எஸ்.ஐ., அரசு ஆகியவை ஒரே கண்ணோட்டத்தில்தான் இனிமேல் பார்க்கப்படும் என்பதுதான் பிரதமர் அளித்திருக்கும் செய்தி (எச்சரிக்கை).
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி, 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒரு சேர நடைபெற முடியாது', 'ரத்தமும் தண்ணீரும் சேர்ந்து பாயமுடியாது' என்றார்.
Cette histoire est tirée de l'édition May 15, 2025 de Dinamani Tiruvannamalai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Dinamani Tiruvannamalai
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
கர்நாடக மேலவைத் தேர்தல்: பாஜக, மஜத எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு
கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏக்கள் 11 பேர் கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தனர். இது, அந்தக் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார்
கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், 4 மணி நேரத்தில் விசாரணையை முடித்து திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.
1 min
June 20, 2026
Dinamani Tiruvannamalai
மேக்கேதாட்டு அணை கூடாது
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
தியாகத்தின் உருவம் !
உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.
2 mins
June 20, 2026
Translate
Change font size
