Essayer OR - Gratuit
உழைப்பு...ஓய்வு...உறக்கம்!
Dinamani Tiruvannamalai
|May 01, 2025
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும்; நிலைநாட்டப்பட வேண்டும். சாதாரண தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, பெரு நிறுவனங்கள் (கார்ப்பரேட் நிறுவனங்கள்) பலவற்றிலும் மனிதாபிமான அணுகுமுறை அற்றுப்போய் கிடக்கிறது.
ஈரோட்டில் ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு தொழிலாளி தான் பணியாற்றும் தொழிற்சாலையில் ஒன்பதரை மணிக்கு வேலையைத் தொடங்கினார். பின்னிரவு சுமார் இரண்டரை மணிக்கு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். இரவுப் பணியில் வேலை செய்த அனைத்துத் தொழிலாளர்களும் செய்வதறியாது பதறினர்.
அகால நேரத்திலும் நிர்வாகத்துக்குத் தகவல் கிடைக்கப் பெற்று தொழிற்சாலையின் நிர்வாகி ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார். அதற்குள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இறப்பை உறுதிசெய்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அந்தத் தொழிலாளி இறந்த பிறகு மருத்துவமனைக்கோ, அவரது வீட்டுக்கோ நாங்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் அதற்கென்று உள்ள வாகனத்தில் ஏற்றிச் செல்லுமாறும் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர்.
அதற்குள் குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தகவல் கிடைத்து, அலறியடித்துக் கொண்டு தொழிற்சாலைக்கு வந்தனர். தொழிற்சாலை நிர்வாகி வாகனத்தை வரவழைத்து தனது பொறுப்பில் சடலத்தை அந்தத் தொழிலாளியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இரண்டு மூன்று நாள்கள் கழித்து, அந்தத் தொழிலாளியின் மரணத்தையொட்டிச் செய்ய வேண்டிய சடங்குகளுக்கு ஏதேனும் உதவி செய்ய நிர்வாகத்திடம் குடும்பத்தினர் முறையிட்டனர். தொழில் இருக்கும் மோசமான சூழலை நிர்வாகி காரணம் காட்டி, இறந்தவுடன் செலவு செய்து சடலத்தை வீட்டுக்கு அனுப்பியதை உதவியாக எடுத்துரைத்து எதுவும் அளிக்காமல் அவர்களை அனுப்பினார்.
பின்னர் தொழிற்சங்கம் இதில் தலையிட்டு தொழிலாளரின் குடும்பச் சூழல், வறுமை என்று இருக்கிற எல்லாக் காரணங்களையும் நிர்வாகத்திடம் எடுத்துரைத்து, நிர்க்கதியாக நிற்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ஒரு தொகையை நஷ்டஈடாக வழங்குமாறு கோரிக்கை வைத்தது.
அந்தத் தொழிலாளிக்கு வயது 54; மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். சட்டம், மனிதாபிமானம், நடைமுறைப் பழக்கம், குடும்பத்தின் நிலை, நிர்வாகத்தின் கடமை, நீதிமன்றத் தீர்ப்பு என்று அனைத்து விளக்கங்களும் அழுத்தமாகவும் முறையாகவும் சங்கத்தின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.
Cette histoire est tirée de l'édition May 01, 2025 de Dinamani Tiruvannamalai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Dinamani Tiruvannamalai
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
கர்நாடக மேலவைத் தேர்தல்: பாஜக, மஜத எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு
கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏக்கள் 11 பேர் கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தனர். இது, அந்தக் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார்
கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், 4 மணி நேரத்தில் விசாரணையை முடித்து திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.
1 min
June 20, 2026
Dinamani Tiruvannamalai
மேக்கேதாட்டு அணை கூடாது
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
தியாகத்தின் உருவம் !
உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.
2 mins
June 20, 2026
Translate
Change font size
