Essayer OR - Gratuit
வணிகப்போர் வளையத்தில் இந்தியா!
Dinamani Tiruvallur
|April 17, 2025
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டொனால்டு டிரம்ப், உலகமே தனது ஆளுகைக்கு கீழ் வந்து விட்டதுபோல செயல்படத் தொடங்கிவிட்டார். மற்ற நாடுகளைத் தமது அடிமை நாடுகளைப் போல கருதிக் கொண்டு பேசுவதும், செயல்படுவதும் அவரின் அன்றாடச் செயல்களாகிவிட்டன.
அரசாட்சியாக இருந்தாலும், மக்களாட்சியாக இருந்தாலும் வரி விதிக்காமல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், வரியை அளவோடு விதிக்க வேண்டும். தேன் அடையிலிருந்து தேன் எடுப்பதுபோல மக்களைத் துன்புறுத்தாமல் வரி விதித்து ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் தமிழ்ப்புலவர்கள் மன்னர்களுக்கு அறிவுறுத்தினர்.
வேலொடு நின்றான் இடுஎன்றதுபோலும் கோலொடு நின்றான் இரவு (குறள் 552)
அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருள் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், எல்லாவற்றையும் தா என்று கேட்பதைப் போன்றதாகும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
அரசியல் நெறிவாழ்வார் எவ்வாறு குடிமக்களிடம் வரி கேட்டு வாங்க வேண்டும் என்பதற்கு சங்க இலக்கியத்தில் ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது. காய்ந்து முற்றிய நெல்லை அறுத்து கவளம் கவளமாக யானைக்கு உண்ணக் கொடுத்தால் 'மா' அளவுள்ள சிறிய நிலத்தில் விளைவதும் பல நாளைக்கு உணவாகும். அவ்வாறின்றி, 100 வயல் அளவுள்ள பெரிய நிலமாயினும், யானை தானே வயலுக்குள் புகுந்து உண்டால் வாய்க்குள் போவதை விட அதன் கால்களில் பாழாவதே மிகுதியாகும். இவ்வாறு, காய்நெல் அறுத்து கவளம் கொளினே' என புறநானூற்றுப் பாடலில் கூறப்படுகிறது. மக்கள் நலம் நாடும் அரசுகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஏழை, பாட்டாளி மக்கள் இதனால் மிகப்பெரும் துயரங்களை தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி ஆட்சி செய்வோர் கவலைப்படுவதில்லை. அதிகாரம் செய்யும் கார்ப்பரேட்டுகளும் கவலைப்படுவதில்லை.
பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கின. 1990-களின் பிற்பகுதியில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்ததாகக் கூறப்பட்டது.
எப்போதும் ஆண்டுக்கு இரண்டு சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் இப்போது சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகள், உலகமயமாக்கலால் பயனடைந்த உலக நாடுகளுக்கு ஏமாற்றமாகவும், பின்னடைவாகவும் அமைந்துள்ளன.
Cette histoire est tirée de l'édition April 17, 2025 de Dinamani Tiruvallur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்தவர் முதல்வர் ஜோசப் விஜய் !
கட்சியைத் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் என தமிழக வனத் துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
1 mins
June 22, 2026
Dinamani Tiruvallur
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Dinamani Tiruvallur
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.
1 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்
நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
2 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
அழகான குதிரைகள் 5
வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.
1 mins
June 21, 2026
Translate
Change font size

