Essayer OR - Gratuit
'வந்தே மாதரம்' 150...
Dinamani Tirunelveli
|November 07, 2025
இந்தியத் திருநாட்டின் வரலாற்றின் நீண்ட நெடிய ஊக்கமளிக்கும் பயணத்தில், பாடல்களும் கலைகளும் இயக்கங்களின் உணர்வாக மாறி மக்களின் உணர்வுகளை செயல்பாடாக மாற்றிய ஏராளமான தருணங்கள் இருந்துள்ளன. சத்ரபதி சிவாஜி பேரரசர் படையின் போர்ப் பாடல்களாகட்டும், சுதந்திரப் போராட்டத்தின் போது இசைக்கப்பட்ட தேசியப் பாடல்களாகட்டும், அவசரகால நிலை பிரகடனத்தின் போது இளைஞர்களின் மெல்லிசைகளாகட்டும், இந்திய சமூகத்தில் பாடல்கள் எப்போதுமே கூட்டு உணர்வையும் ஒற்றுமையையும் தூண்டுகின்றன.
அத்தகைய பாடல்களுள் ஒன்றுதான் இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'. இதன் வரலாறு போர்க்களத்தில் தொடங்கவில்லை. மாறாக, அறிஞர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயவின் அமைதியான அதே வேளையில் உறுதியான மனதில் உதித்தது. 1875-ஆம் ஆண்டு, ஜகதாத்ரி பூஜையின் (கார்த்திகை சுக்ல நவமி அல்லது அக்ஷய நவமி) புனித நாளில், அவர் இயற்றிய ஒரு பாடல், தேச விடுதலையின் ஒருமித்த கீதமாக மாறியது. அந்தப் புனித வரிகளில், அவர் பாரதத்தின் ஆழமான நாகரிக வேர்களிலிருந்து, அதர்வண வேதத்தின் 'மாதா பூமிஹ் புத்ரோ அஹம் பிருதிவ்யா' ('பூமி எனது தாய், நான் அவரது மகன்) பிரகடனத்திலிருந்து தேவி மகாத்மியரின் தெய்வீகத் தாயின் வழிபாடு வரை உத்வேகம் பெற்றார்.
பங்கிமின் வார்த்தைகள் பிரார்த்தனையாகவும், தீர்க்கதரிசனத்துடனும் இருந்தன. 'வந்தே மாதரம்', தேசியப் பாடல் அல்லது சுதந்திரப் போராட்டத்தின் உயிர் நாடி மட்டுமல்ல. பங்கிம் சந்திரரின் கலாசார தேசியவாதத்தின் முதல் பிரகடனமாக இருந்தது. இந்தியா என்பது புவியியல் சார்ந்த பகுதி மட்டுமல்ல என்றும், மாறாக அது புவி-கலாசார நாகரிகமாகவும், வரைபடத்தில் கோடுகளால் இணைக்கப்பட்டிருப்பதுடன், கலாசாரம், நினைவுகள், தியாகம், வீரம் மற்றும் தாய்மையைப் பகிர்ந்து கொண்டுள்ளதையும் நமக்கு நினைவூட்டுகிறது. இது வெறும் நிலம் அல்ல; இது ஒரு தீர்த்தம்; பக்தியாலும், கடமையாலும் தூய்மைப்படுத்தப்பட்ட புனித மண்.
மகரிஷி அரவிந்தர் கூறியவாறு, இந்தியாவின் நவீன துறவியாக விளங்கிய பங்கிம், தனது வரிகள் மூலம் நாட்டு மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார். ஆனந்த மடம் என்ற அவரது படைப்பு, புதினம் மட்டுமின்றி, தூங்கிக் கொண்டிருந்த தேசத்தை அதன் தெய்வீக வலிமையை மீண்டும் கண்டுபிடிக்கத் தூண்டிய ஒரு மந்திரமானது.
Cette histoire est tirée de l'édition November 07, 2025 de Dinamani Tirunelveli.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள்
உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக மக்களவை தலைவரிடம் விசாரணைக் குழு அறிக்கை
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
நீட் வினாத் தாள் கசிவு: மகாராஷ்டிரத்தில் இரு மாணவர்களின் இல்லங்களில் சிபிஐ சோதனை
இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இரு மாணவர்களின் இல்லங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்
அமெரிக்கா ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மே 25 வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
May 20, 2026
Dinamani Tirunelveli
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நாடுகளை அனுமதிக்கும் வகையில் பொருளாதார தடைகளிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது.
1 min
May 20, 2026
Listen
Translate
Change font size

