Facebook Pixel அழிவின் விளிம்பில் கழுகுகள்! | Dinamani Thoothukudi - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

அழிவின் விளிம்பில் கழுகுகள்!

Dinamani Thoothukudi

|

September 06, 2025

தடைசெய்யப்பட்ட நீம்சலைடு, புளுநிக்ஸின் மற்றும் கார்புரோபென் ஆகிய மருந்துகளை கால்நடைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் செலுத்துவதால் அவை இறந்த பிறகு அவற்றின் மாமிசத்தை உண்ணும் கழுகுகள் அதிக அளவில் உயிரிழப்பதாக கழுகு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

- பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

இயற்கையின் சுற்றுச்சூழலைக் காப்பதில் பறவைகளுக்கு தனி இடம் உண்டு. பறவைகளின் அரசனான கழுகுகள் சுற்றுச்சூழல் மாசடைதலைத் தடுக்கவும், இயற்கை விவசாயம், கிராமப்புற சூழல்களைத் தக்கவைக்கவும் மனிதர்களுக்கு உதவுகின்றன. குறிப்பாக, கரிமக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் அகற்றுவதில் அவை துப்புரவாளர்களாகச் செயல்படுகின்றன. அப்படிப்பட்ட அந்த இனம், உலகில் வேகமாக அழிந்து வருகிறது.

அசைவப் பறவையான கழுகு, பொது இடங்கள், காடுகளில் இறந்து கிடக்கும் விலங்குகளின் இறைச்சியை உண்டு, உலகின் தூய்மைப் பணியாளராக வானில் வலம் வந்து வனத்தையும், வனாந்திரத்தையும் தூய்மையாக வைத்து, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துகிறது. இறந்த கால்நடைகளை உண்டு, இதன் மூலம் மனிதர்களிடையே தொற்று நோய்கள் பரவுதலைத் தடுக்க உதவுகிறது. வெறி நாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற மிகவும் நச்சுத்தன்மையுள்ள நோய்க்கிருமிகளின் பாதிப்புகளிடமிருந்து காத்துக்கொள்ளும் திறன் கழுகுக்கு உண்டு.

இந்தியா முழுவதும் மொத்தம் ஒன்பது வகையான கழுகு இனங்கள் உள்ளன. அதிகமாகக் காணப்படும் வெள்ளைத்தலை கழுகு முதல் காட்டில் வாழும் சிவப்புத் தலை கழுகு வரையிலான இனங்கள் ஒவ்வொன்றும் சுற்றுச்சூழலைக் காப்பதில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. இமயமலை கிரிஃபோன் மற்றும் தாடியுள்ள கழுகு போன்றவை பொதுவாக இமயமலையின் உயரமான பகுதிகளில் காணப்படுகின்றன.

எகிப்திய கழுகு கிட்டத்தட்ட நாடு முழுவதும் காணப்படுகிறது. மெல்லிய அலகுள்ள கழுகுகள் வடக்கு சமவெளி களிலும், அஸ்ஸாம் பள்ளத்தாக்கிலும் காணப்படுகின்றன. இந்தியக் கழுகுகள் இந்தியாவின் மத்திய மற்றும் தீபகற்ப பகுதிகளில் பரவியுள்ளது. சினீரியஸ் மற்றும் யூரேசியன் கிரிஃபான் இனக் கழுகுகள் இந்தியாவுக்கு குளிர்கால விருந்தினர்களாக வருகின்றன. அனைத்து வகையான கழுகுகளும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் பட்டியலிடப்பட்டுள்ளன.

விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் நச்சு மருந்துகளால் இறக்கும் எலிகள் மற்றும் கால்நடைகளை உண்பதால் இறத்தல், உயர் அழுத்த மின்கம்பிகளில் சிக்கி மடிதல், காடுகளின் அழிவு முதலியன கழுகு இனங்கள் அருகி வருவதற்குக் காரணங்களாக சொல்லப்படுகின்றன.

PLUS D'HISTOIRES DE Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Thoothukudi

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,06,400-க்கு விற்பனையானது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Thoothukudi

சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Thoothukudi

தேசிய நல்லாசிரியர் விருது தமிழக ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள தமிழக ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Thoothukudi

ரூ. 2 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: தம்பதி, இடைத்தரகர் கைது

சேலத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ. 2 லட்சத்துக்கு விற்றதாக தம்பதி, இடைத்தரகரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Thoothukudi

ஆழ்கடல் விபத்துகள்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Thoothukudi

மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி

தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

June 26, 2026

Translate

Share

-
+

Change font size