Essayer OR - Gratuit

என்ன வளம் இல்லை நமது திருநாட்டில்?

Dinamani Thoothukudi

|

July 08, 2025

அரசியல்வாதிகள் மனிதத் தலைகளைக் கணக்கிட்டு அவர்களின் அறிவார்ந்த, ஆரோக்கிய நிலைகளை உயர்த்தாது வெறும் வாக்கு எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு ஏழ்மையைப் போக்காது ஏழைகளை வளர்க்கின்றனர்.

- டி.எஸ். தியாகராசன்

அண்மையில் தில்லி உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தெற்கு தில்லி செட்டில்மென்ட் எனப்படும் மதராஸி முகாமில் (கேம்ப்) உள்ள 400 வீடுகளில் 370 வீடுகள் இடிக்கப்பட்டன. காரணம், இந்த வீடுகள் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. மற்றொரு காரணம், பாரா புல்லா பகுதியின் மழைநீர் வடிகால் பாதை இந்த ஆக்கிரமிப்பு வீடுகளால் அடைபட்டு இருந்தது. இதனால், ஆண்டுதோறும் மழை, வெள்ள காலங்களில் அந்தப் பகுதியே மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

தில்லி அரசும் இவர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகளை (அடுக்குமாடி குடியிருப்பு) கட்டி, இவர்களைக் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால், மதராஸி முகாமில் குடியிருந்தவர்கள் தற்போது தாங்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் குடியேறுவது, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்; தங்கள் குழந்தைகள் படிக்கவும், தாங்கள் வேலை செய்து பிழைக்கவும் இயலாது எனக் கூறி, குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல மறுத்து விட்டார்கள்.

இறுதியில் தில்லி அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பு உள்ள வீடுகளை இடித்து விட்டார்கள். இதனால் 400 குடும்பங்கள் வீடுகளை இழந்து தெருக்களில் தஞ்சம்புக நேர்ந்தது. இதையறிந்த தமிழக அரசு வீடிழந்த மக்களை தமிழ்நாடு இல்லத்துக்கு வரச் செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடு குறித்தான ஆணை அல்லது அவர்களுக்கு வீடு ஒதுக்கவில்லை என்ற ஆணை, ஆதார் அட்டை பரிசோதித்து தலா ரூ.8000-ஐ அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்தது.

வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கியில் கணக்கு தொடங்க சிறப்பு முகாம் அமைத்தனர். தலா 27 கிலோ அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் இதர சமையல் பொருள்கள் அடங்கிய பையும் வழங்கப்பட்டது. மீளாத்துயரில் இருந்த மக்களுக்குத் தமிழக அரசு ஆறுதலளித்ததை வெகுவாகப் பாராட்டலாம்.

நாட்டின் தலைநகர் தில்லியில் எப்படி, இப்படி ஏழைத் தமிழர்கள் குடியேறினார்கள்? பிழைக்க, வேலை தேடி சுமார் 2,000 கி.மீ. தொலைவு வந்தவர்கள் சுமார் 20, 30 ஆண்டுகளாக மதராஸி முகாமில் குடியேறினர். பங்களாக்களில், வீடுகளில் வீட்டுத் தூய்மைப் பணி செய்வது, அவர்களது சொகுசு வாகனங்களைத் துடைத்துச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைச் செய்வது தான் இவர்களின் வாழ்க்கை முறை.

PLUS D'HISTOIRES DE Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Thoothukudi

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Thoothukudi

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Thoothukudi

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Thoothukudi

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Thoothukudi

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Thoothukudi

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Thoothukudi

காலமானார் காந்தியவாதி மா.வன்னிக்கோன்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்தின் நிறுவனரும், காந்தியவாதியுமான மா.

time to read

1 min

January 09, 2026

Dinamani Thoothukudi

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Thoothukudi

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Translate

Share

-
+

Change font size