Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்!

Dinamani Thoothukudi

|

April 15, 2025

தமிழ்நாடு அரசின், மாநிலப் பாடத்திட்ட முறை வலிமையான கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும், வெற்றிகரமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தாலும் மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் குறுகிய காலத்தில் ஏறத்தாழ 6 மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

- மு. சிபிகுமரன்

ஒரு மாநிலத்தின் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பது, பாதுகாப்பது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது என்ற தலையாய கடமையை மாநிலப் பாடத்திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கல்விப் பாடத் திட்டத்தைப் பொருத்தவரையில் தமிழ் மொழி, இலக்கிய வரலாறு, அரசியல் மற்றும் சமூகப் பண்பாட்டு வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம் இவற்றோடு உலகமொழியாகிய ஆங்கிலம் என நிறைவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

காலந்தோறும் பல்வேறு சீர்திருத்தங்களைப் பாடத்திட்டத்தில் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு, கல்வி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் அதிகபட்சமான நிதியை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. தமிழக அரசு பின்பற்றுகிற பாடத்திட்டம் அறிவியல் பூர்வமானதும் வரலாற்றுச் சிறப்புடையதும் ஆகும். அதன் காரணமாக, இந்திய நாட்டுக்கு தலைசிறந்த கல்வியாளர்களையும், விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சிப்பணி அதிகாரிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இவர்களுள் பெரும்பாலோர் அரசுப் பள்ளிகளிலும், தமிழ் வழியிலும் கற்றவர்கள் என்பது மற்றுமொரு சிறப்பாகும். இவ்வாறு பயின்றவர்கள் இன்று தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்று வருகிறார்கள்.

கடந்த 8.08.2024 தரவுகளின்படி, தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடத் திட்டத்தைப் பின்பற்றுகிற அரசே நடத்துகிற தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 37,592 ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 8,329 ஆகும். தனியார் பள்ளிகள் 11,443 ஆகும். இதில் அரசு நடத்தும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 3,168 ஆகும். அதே வேளையில், சிபிஎஸ்இ எனப்படுகிற மத்திய அரசின் பாடத் திட்டத்தைப் பின்பற்றுகிற பள்ளிகள் தமிழ் நாட்டில் கடந்த 2010-ஆம் ஆண்டில் 250 பள்ளிகளாகவும், 2015-ஆம் ஆண்டில் 580 பள்ளிகளாகவும், 2024 -ஆம் ஆண்டில் 1,617 பள்ளிகளாகவும் இருக்கின்றன. இவை அனைத்தும் மேல்நிலைப் பள்ளிகளே. எனவே, தமிழ்நாடு அரசு நடத்தும் மேல்நிலைப் பள்ளிகளில் சரிபாதி அளவாக வளர்ந்து நிற்கின்றன மத்தியப் பாடத் திட்டப் பள்ளிகள். ஊரகப் பகுதிகளில் கூட மத்தியப் பாடத் திட்டப் பள்ளிகள் மீதான நாட்டம் அதிகரிப்பதைக் காண முடிகிறது.

PLUS D'HISTOIRES DE Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Thoothukudi

ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி

இங்கிலாந்து கோல் மழை

time to read

1 mins

December 01, 2025

Dinamani Thoothukudi

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Thoothukudi

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா

பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Translate

Share

-
+

Change font size