தமிழர் பெருமையைப் பறைசாற்றும் கீழடி!
Dinamani Salem
|July 03, 2025
வரலாறுகள் அறியப்பட்டவரை சுமேரிய நாகரிகம்தான் நீண்ட மூத்தது என்று அறியப்பட்டது. இத்தகைய நாகரிகத்தின் தொடர் நீட்சியாக இதன் பண்பாடு, பழக்கவழக்கம், வழிபாட்டு முறைகளில் தமிழர் அடையாளங்களைக் கண்டறிந்ததாக மொழிவழியாகவும், நாகரிகத்தின் வழியாகவும் நிரூபிக்கப்பட்டது.
இந்திய வரலாற்றை இனிமேல் தெற்கில் இருந்து பார்க்க வேண்டும் என்கிற அளவுக்கு ஆதாரபூர்வமான வரலாற்றுத் தடயங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. விந்திய மலைக்குக் கீழே வாழும் தக்காணப் பீடபூமியில் வாழ்பவர்கள் மிக உயர்ந்த நாகரிக வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் உலகத்துக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லப்படும் தொல்பொருள் ஆய்விடம்தான் கீழடி.
கீழடியில் கிடைத்த 6 கரிம மாதிரிகள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி ஆய்வுக்காக, அமெரிக்காவின் ப்ளாரிடோவில் உள்ள பீட்டா அனலிடிகல் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி அந்தப் பொருள்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580-ஆவது ஆண்டையும், 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205-ஆவது ஆண்டையும் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த இரு மட்டங்களுக்குக் கீழேயும், மேலேயும் பொருள்கள் இருப்பதால் கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரை என்று தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.
இவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, தொல் தாவரவியல், மூலக்கூறு உயிரியல், மக்கள் மரபியல், சுற்றுச்சூழல்தொல்லியல் மற்றும் மொழியியல் தொல்லியல் ஆகிய துறைகளின் வல்லுநர்களும் இவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. ஆகவே, கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல இரண்டாவது நகர நாகரிகம் இங்கு நிகழவில்லை என்று கருதப்பட்டு வந்தது.
ஆனால், கீழடியில் கிடைத்த பொருள்களை வைத்து கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரிகம் தொடங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும், இதே காலகட்டத்தில்தான் நகர நாகரிகம் உருவாகியுள்ளது.
கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
Cette histoire est tirée de l'édition July 03, 2025 de Dinamani Salem.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Salem
Dinamani Salem
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Salem
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Salem
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Salem
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Salem
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Salem
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Salem
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Salem
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Salem
ஒற்றுமைச் சிலையை வடிவமைத்த பிரபல சிற்பி ராம் சுதார் காலமானார்
உலகின் மிக உயரமான சிலையான குஜராத்தின் 'ஒற்றுமைச் சிலையை' வடிவமைத்த புகழ்பெற்ற சிற்பி ராம் வஞ்சி சுதார் (100), வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால் நொய்டாவில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நள்ளிரவு காலமானார்.
1 min
December 19, 2025
Dinamani Salem
லாதம் - கான்வே கூட்டணி அபாரம்
மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட்
1 min
December 19, 2025
Translate
Change font size

