Essayer OR - Gratuit
ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
Dinamani Pudukkottai
|December 24, 2025
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் திங்கள்கிழமை இரவு சிறைபிடித்தனர்.
-
அவர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜோதிபாசுக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5 ரோந்துப் படகுகளில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அந்தப் படகை சிறைபிடித்தனர்.
படகிலிருந்த பிரதாப் (28), சந்தியா நிவாஸ்தான் (33), ஜேம்ஸ்ஹெய்டன் (23), காயல்ராஜ் (23), டோஜா (21), ஆண்டனிடெல்மேன் (32), ஆக்போ நிஜோ (17), மரியா ஆட்டோ (19), கோர்ப்பசேவ் (35), மாதன்சன் (28), நிமல் (31), ஆண்டனி தில்மென்(32) ஆகிய 12 மீனவர்களைக் கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு செவ்வாய்க்கிழமை காலையில் அழைத்துச் சென்றனர். மேலும், இந்த மீனவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்கள் 12 பேர் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அவர்களை வரும் ஜன.5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 12 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
Cette histoire est tirée de l'édition December 24, 2025 de Dinamani Pudukkottai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
தில்லியில் அமித் ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார்.
1 min
January 09, 2026
Dinamani Pudukkottai
சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.
1 min
January 09, 2026
Dinamani Pudukkottai
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Pudukkottai
வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்
சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.
1 mins
January 09, 2026
Dinamani Pudukkottai
தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.
1 min
January 09, 2026
Dinamani Pudukkottai
டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு
வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Pudukkottai
பாஜக தேசியத் தலைவராகிறார் நிதின் நவீன்!
பாஜக தேசிய செயல் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவரும் அக்கட்சியின் உயரிய பொறுப்பை வகிக்கும் இளம் தலைவராகவும் அறியப்படும் நிதின் நவீன் (45), இம்மாத இறுதியில் பாஜக தேசியத் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.
1 mins
January 09, 2026
Dinamani Pudukkottai
வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.
1 min
January 09, 2026
Dinamani Pudukkottai
ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Pudukkottai
திண்டுக்கல்லில் தம்பதி வெட்டிக் கொலை
திண்டுக்கல்லில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக பிணையில் வெளியே வந்தவரும், அவரது மனைவியும் வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
1 min
January 09, 2026
Listen
Translate
Change font size
