Essayer OR - Gratuit
துறந்தார் பெருமை போற்றுதும்!
Dinamani Pudukkottai
|July 09, 2025
சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு கருதாது இருப்பதோடு எல்லாவுயிரும் இன்புற்றிருப்பதற்காக தன் வாழ்வைத் தகுதிப்படுத்திக் கொள்வதே மெய்த்துறவின் அடிப்படை. எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றவர் யாரோ அவரே மெய்த்துறவி.
தமிழ்மரபு காட்டுகிற அறங்கள் இரண்டனுள் ஒன்று இல்லறம்; மற்றொன்று துறவறம். இல்லறம் துறவறத்துக்கான நல்வழி. துறவை நேரடியாக மேற்கொள்வோரும் உளர்; இல்லறத்தின் பயன்துய்த்துப் பின்னர் துறவறம் சிறந்தவரும் உளர்.
துறவு மார்க்க ஞானம் என்பது பொன்னில் பதித்த ரத்தினம் ஒக்கும்; இல்லற மார்க்க ஞானமானது இரும்பில் பதித்த ரத்தினம் ஒக்கும் என்பர் ஞானியர்.
துறவு வாழ்வு மனிதனின் ஆறாவது புலனாகிய மனதை அடக்கும் வித்தை. மனம் பற்றுகளால் துன்பத்தில் வீழும் போது, அதை உறுதி என்னும் கடிவாளத்தால் பிடித்து நிறுத்திப் பழக்குவதே சரியான துறவுப் பயிற்சியாம். இதற்கு யோகம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்தப் பயிற்சியை சிலர் தனியிடங்களிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பழகுகிறார்கள். வேறுசிலர் மூச்சைக் கட்டியும் அவயவங்களைப் பலவாறு திருப்பியும் பழகுகிறார்கள்: தனியே இருந்து ஜபம் செய்து பார்க்கிறார்கள்.
ஆனால், இவற்றிலெல்லாம் மனம் அடங்கி விடாது. உலகத்தாருடன் கூடி அவர்களைப் போலவே தொழில் செய்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங்கொடாதபடி, தன் மனத்தைக் கட்டக்கூடிய திறமைதான் துறவின் வெற்றி, மற்ற முயற்சிகளெல்லாம் வீண். தண்ணீரிலே இருந்தும் ஒட்டாது இருக்கிற தாமரை இலையைத் துறவுக்குத் தகுந்த உவமையாக்குவர்.
எல்லா சமயங்களும் துறவறத்தைச் சுட்டியபோதும், துறவு சமயம் சார்ந்தது அன்று. அது மானுடம் சார்ந்தது; உயிர்க்குலம் சார்ந்தது. மண்ணால் செய்த ஓட்டினையும் பொன்னால் செய்த அணியினை யும் ஒன்றே என்று பற்றற்று நோக்கும் நற்குணமே துறவின் சிறப்பு.
சங்க இலக்கியம் துறவைப் பேசுகிறது. காப்பியங்கள் விவரிக்கின்றன. சன்னியாசம் என்று இந்து மதம் துறவைக் குறிக்கிறது. அருளாளர்கள் பலர் துறவு போற்றியவர்கள். பௌத்தம் புத்தர் பின்பற்றிய துறவைச் சுட்டி நிர்வாணம் என்றும், முழு விடுதலை யைப் பெருந்துறவு அல்லது பரி நிர்வாணம் என்றும் குறிக்கிறது. சமணம் சாரணம் என்கிறது. கிறிஸ்தவத்தில் இயேசுவின் வாழ்க்கையே துறவின் சான்று. இஸ்லாம் இல்லறத்தை மறுக்காது பற்றில்லாப் பிணைப்பு மூலம் துறவுக்கு வழிகாட்டுகிறது.
Cette histoire est tirée de l'édition July 09, 2025 de Dinamani Pudukkottai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)
1 mins
January 05, 2026
Dinamani Pudukkottai
அரசின் கடனும் மக்களின் கடனே!
ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.
2 mins
January 05, 2026
Dinamani Pudukkottai
உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் மீண்டும் இயக்கம்
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.
1 min
January 05, 2026
Dinamani Pudukkottai
வெனிசுலா விவகாரம்: இந்தியா கவலை
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தது கவலையளிப்பதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
January 05, 2026
Dinamani Pudukkottai
பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
January 05, 2026
Dinamani Pudukkottai
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Pudukkottai
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Pudukkottai
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Dinamani Pudukkottai
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Pudukkottai
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Translate
Change font size
