Facebook Pixel நாயைக் கொல்லாத புலி! | Dinamani Puducherry - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

நாயைக் கொல்லாத புலி!

Dinamani Puducherry

|

July 01, 2025

விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. பகை, வன்மம், பழிவாங்குதல் போன்ற தீய குணங்களை மனிதன் விட்டொழித்து அன்பு, பாசம், கருணை போன்ற நல்ல குணங்களைப் பெற்றால் உலகம் உன்னத நிலையை அடையும்.

- முனைவர் இரா.கற்பகம்

சில நாள்களுக்கு முன்பு கேரளம் - தமிழ்நாடு எல்லையில், இடுக்கியில் உள்ள ஒரு ஏலக்காய் தோட்டத்தில், ஓர் ஆழமான குழியில் ஒரு புலியும் நாயும் விழுந்து கிடந்தன. பல மணிநேரம் கழித்துதான் வனத் துறையினர் வந்து அவற்றை மீட்டனர். நாயை வெளியில் விட்டபிறகு, புலியைப் பெரியார் புலிகள் காப்பகத்தில் கொண்டுவிட்டனர். இந்தச் செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் வந்து பலரது கவனத்தை ஈர்த்தது.

அவ்விரண்டு விலங்குகளும் வெகுநேரம் ஒரே குழியில் ஒன்றாகக் கிடந்திருக்கின்றன. இருந்தும், நாயை அந்தப் புலி கொன்று சாப்பிடவில்லை! பொதுவாக சிறுத்தை தான் நாயை வேட்டையாடி உண்ணுமே தவிர, நாயை புலி வேட்டையாடாது. ஏனெனில், நாய் புலியின் இயற்கையான இரை ஆகாது. மான், காட்டெருமை போன்ற பெரிய விலங்குகளே புலியின் இயற்கையான இரையாகும். இரண்டு விலங்குகளுமே உயிர் பயத்தில் இருந்த போது, தப்புவது ஒன்றுதான் அவற்றின் தலையாய கவலையாய் இருந்திருக்குமேயன்றி, உணவைப் பற்றிய கவலை அப்போது இருந்திருக்காது.

விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. அதுவும் இயற்கையின் நியதிக்குக் கட்டுப்பட்டே கொல்கின்றன. அந்தப் புலிக்குப் பசி வந்திருக்கலாம்; இருந்தாலும், தன்னுடன் சிக்கிக்கொண்டு, உயிர் பயத்துடன் இருந்த அந்த நாயின் மீது கருணை கொண்டு, அதை ஒன்றும் செய்யாமல் விட்டது. அந்த நாயும் புலியின் கருணையை உணர்ந்து செவ்வனே இருந்தது. ஐந்தாம் அறிவைத் தாண்டி அவை இரண்டும் சிந்தித்துச் செயல்பட்டிருக்கின்றனவோ எனத் தோன்றுகிறது!

மனிதர்களுக்கு ஆறறிவு உள்ளது. ஆனால், வயிற்றுப் பசி, உடற்பசி, கோபம், ஆணவம், பழிவாங்குதல் என்று ஏதேதோ காரணங்களுக்காகக் கொலை, கொள்ளை போன்ற மகாபாதகச் செயல்களைச் செய்கின்றார்களே! தம் ஆறாம் அறிவைக் கொண்டு இத்தகைய துர்க்குணங்களை விட்டொழிப்பதை விட்டுவிட்டு, இயற்கையின் நியதிக்கு மாறான, எண்ணிப் பார்க்கவும் அஞ்சத்தக்க கொடிய செயல்களை சர்வ சாதாரணமாகச் செய்கிறார்களே!

விலங்குகள் திட்டம் வகுத்துக் கொலை செய்வதில்லை. பசிக்கும்போது தன்னை விடச் சிறிய விலங்கை வேட்டையாடித் தின்கின்றன. ஆனால், மனிதர்கள் சாதுர்யமாகப் பலநாள் திட்டம் வகுத்துக் கொல்கின்றனர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Puducherry

Dinamani Puducherry

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது.

time to read

2 mins

April 28, 2026

Dinamani Puducherry

கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்

கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Puducherry

கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு

கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Puducherry

தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 20,000 மெகாவாட்-ஆக உயர்வு

கடும் வெயில் எதிரொலி

time to read

1 min

April 28, 2026

Dinamani Puducherry

ரக்பி ப்ரீமியர் லீகில் மகளிர் அணிகள் அறிமுகம்

ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ், ரக்பி இந்தியாவுடன் இணைந்து, எச்எஸ்பிசி ரக்பி பிரீமியர் லீக் (ஆர்பிஎல்) நடைபெறவுள்ள தொடரில் 4 மகளிர் அணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

time to read

1 min

April 28, 2026

Dinamani Puducherry

சபலென்கா, லெய்லா முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் களிமண் கள டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில், நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Puducherry

15 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 3 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு

வேலூர், பரமத்தி வேலூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 15 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகப் பதிவானது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Puducherry

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!

இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது.

time to read

2 mins

April 27, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

இந்திய மகளிருக்கு முதல் வெற்றி

தாமஸ், உபேர் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் வெற்றியை பெற்றது.

time to read

1 min

April 27, 2026

Translate

Share

-
+

Change font size