Essayer OR - Gratuit

அறிவறிந்த மக்கட்பேறு

Dinamani Puducherry

|

June 03, 2025

இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவர், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறார்.

- முனைவர் அருணன் கபிலன்

உலகத்தில் பல்லுயிரும் இன்புற்றுவாழ்வதற்கு இயற்கை வகை செய்து தந்திருக்கிறது. ஆதலால் அவை தத்தம் இயல்புகளோடு இயற்கைக்கு முரணாகாத வண்ணம் வாழ்க்கையை நிறைவு செய்கின்றன.

இறப்புக்கும் பிறப்புக்குமான இடைவெளியில் எல்லா உயிரும் தனக்கான மரபு வழியைத் தொடர்கின்றன. ஏனைய உயிர்களின் மரபுத் தொடர்ச்சிக்கு இனப்பெருக்கம் என்று பெயர். அதாவது, தன்னுடைய இனத்தைப் பெருக்கிக் கொள்வது என்று அதற்குப் பொருள். ஆனால், மனிதன் மேற்கொள்கிற மரபுத் தொடர்ச்சிக்குப் பேறு என்று பெயர். இதனை 'மக்கட்பேறு' என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிறப்பித்துக் கூறுகிறார்.

பெறுதல் என்பதும் பெருக்குதல் என்பதும் இயல்பாகத் தன் முயற்சியால் தோன்றக் கூடிய ஏனைய உயிர்ச்செயலின் விளைவு. ஆனால், பேறு என்பது அவ்வாறன்று. மானுட முயற்சியோடு இயற்கையின் அதற்கு மேலான ஆற்றலின் வெளிப்பாடாகப் பெறப்படுவதே பேறு.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெற வேண்டிய பேறுகள் பலவுண்டு. அவற்றைத் தொகுத்துப் பதினாறு என்று வகைப்படுத்துகிற தமிழ் மரபு மக்கட்பேற்றினை நடுவில் நிறுத்துகிறது. ஆனால், திருவள்ளுவர் மற்ற பேறுகளை விடவும் முதன்மையானது மக்கட்பேறு என்று குறிப்பிடுவதுடன், அந்தப் பேற்றினை 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று பண்புசுட்டி முன்னிலைப்படுத்துகிறார். அதிலும் 'அறிவறியும் மக்கட்பேறு' என்று குறிப்பிடாமல் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.

இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவர், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறார். தோன்றின் புகழொடு தோன்றுதலைத் தானே தன் திருக்குறளில் மக்கட்பேற்றின் சிறப்பினை உணர்த்துவதற்கு வள்ளுவர் பயன்கொண்டிருக்கிறார்.

ஏனெனில், கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்தும் எல்லாருக்கும் மக்கட்பேறு எளிமையாக வாய்த்து விடுகிறது. ஆனால், 'அறிவறிந்த மக்கட்பேறு' என்பது அத்தனை எளிதாகக் கிடைத்து விடுகிற பேறு இல்லை என்பது அவர்தம் கருத்து. இது சங்க காலத்திலிருந்தே தொடர்ந்திருக்கிறது.

PLUS D'HISTOIRES DE Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு தூக்குத் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆட்சியில் பங்கு சாத்தியம்

ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது; அதற்கான சாத்தியமும் உள்ளது என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size