Facebook Pixel மீண்டும் நிதர்சனத்தை நிரூபித்த கத்தார் தாக்குதல் | Dinamani Nagapattinam - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

மீண்டும் நிதர்சனத்தை நிரூபித்த கத்தார் தாக்குதல்

Dinamani Nagapattinam

|

September 12, 2025

கத்தாரில் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டிவிடலாம் என்ற இஸ்ரேலின் எண்ணம் 100 சதவீதம் ஈடேறாது என்ற நிதர்சனத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

துபை, செப். 11:

இதுவரை இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதலில், தங்களது முக்கிய தலைவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று ஹமாஸ் அமைப்பு கூறுகிறது. ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை. கடந்தகால ஹமாஸ் தலைவர்கள் படுகொலைகளின்போதும் அந்த அமைப்பு மௌனமாகவே இருந்து வந்துள்ளது.

ஒருவேளை இந்தத் தாக்குதல் வெற்றி பெற்று, ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், அந்த அமைப்புக்கு அது முடிவாக இருக்காது. இரண்டு ஆண்டுகால போரைத் தாக்குப்பிடித்து, காஸாவில் இன்னும் சுமார் 20 பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கிறது ஹமாஸ்.

காஸா சிட்டியை முழுமையாக கைப்பற்றுவதற்காக இஸ்ரேல் தொடங்கியுள்ள புதிய தாக்குதல், 2023 அக்டோபர் 7 முதல் நடந்துவரும் போரில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திரும்பத் திரும்ப வாக்குறுதியளிக்கும் 'முழுமையான வெற்றியை' கொடுக்குமா என்பது சந்தேகமே. இதற்கு ஒரு காரணம், மக்களிடையே இரண்டறக் கலந்து, பிறகு மீண்டும் எழும் ஹமாஸின் திறன். ஹமாஸை தோற்கடிப்பது மட்டுமல்லாமல், அதை முழுமையாக ஒழித்து, மீண்டும் உருவாகாமல் தடுப்பது என்ற இஸ்ரேலின் இலக்கு, முடிவில்லாத போர் மற்றும் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேலின் முன்னாள் ராணுவ அதிகாரிகளே கூறுகின்றனர்.

பேரிழப்புகளைத் தாங்கிய ஹமாஸ்: இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகக் கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளில் ஒன்றில் ஹமாஸின் ஏறத்தாழ அனைத்து மூத்த தலைவர்களும், ஆயிரக்கணக்கான படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். அதன் நீண்ட தூர ஏவுகணை கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. அதன் அரசுக் கட்டமைப்பு தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. ஈரான் மற்றும் அதன் பிற பிராந்திய கூட்டாளிகளும் கடும் பின்னடைவில் உள்ளன.

இத்தனைக்கு இடையிலும் ஹமாஸிடம் இன்னமும் ஆயிரக்கணக்கான படையினர் உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கணித்துள்ளது. இதில் போரின்போது ஹமாஸில் இணைந்தவர்களும் அடங்குவர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

2 mins

June 10, 2026

Dinamani Nagapattinam

'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Dinamani Nagapattinam

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்

time to read

1 mins

June 10, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Nagapattinam

இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை

சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 09, 2026

Translate

Share

-
+

Change font size