Essayer OR - Gratuit
‘தீபாவளி பரிசு’ கிடைக்க...
Dinamani Nagapattinam
|September 10, 2025
ஜிஎஸ்டி குறைப்பு குறித்து தமிழ்நாடு அரசு தனது பெரும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. இந்தப் புதிய அறிவிப்பின்படி, அன்றாடம் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள் பலவற்றுக்கும் வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதாரண மக்களுக்கு தீபாவளிப் பரிசு என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் உண்மையா?
சரக்கு, சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவற்றில் இரண்டடுக்கு சரக்கு சேவை விகித முறை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. 12%, 28% அடுக்குகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 5%, 18% என இரண்டு புதிய விகிதங்கள் நீண்ட நாள் ஒரு முடிவை எட்டப்படாமல் இருந்த நிலையில், ஒருமித்த கருத்து ஏற்பட்டிருக்கிறது. இவற்றில் சில வரவேற்புகளும், இந்த மாற்றத்தினால் ஏதோ அரசியல் இருப்பதாக எதிர் முகாமும் மாறி மாறி தங்கள் விவாதங்களை வைத்திருக்கிறது.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருள்கள் மீதான வரிக் குறைப்பு வரவேற்கத்தக்கது என்றும் ஒருசாராரும், சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டது என்றும் எதிர்க்கட்சிகளும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தைக் கொண்டு வர மத்திய அரசைத் தூண்டியது எது? மந்தமான பொருளாதார வளர்ச்சியா?, வீட்டுக் கடன் அதிகரிப்பா?, வீட்டுச் சேமிப்பு குறைவதா?, பிகார் தேர்தலா?, டிரம்ப்பின் வரி விதிப்பா அல்லது இவை அனைத்துமா என்று காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை முழுமனதுடன் வரவேற்கின்றனர் மத்திய அரசின் ஆதரவுத் தரப்பினர். இருந்த போதிலும் மாநில வருவாய், மாநில நிதி சுயாட்சி பாதுகாப்பு குறித்து மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இப்படி எதிரும், புதிருமான இந்தச் சீர்திருத்தத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் மீதான வரிகளைக் குறைத்திருப்பதன் மூலம் ஏழை எளியவர்களின் பணச்சுமை குறைந்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடமுடியாது.
Cette histoire est tirée de l'édition September 10, 2025 de Dinamani Nagapattinam.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Nagapattinam
பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது
பிரதமர் மோடி
2 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Dinamani Nagapattinam
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Nagapattinam
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Nagapattinam
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Nagapattinam
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Translate
Change font size

