Essayer OR - Gratuit
சமூக நீதியும் சம நீதியும்
Dinamani Madurai
|July 18, 2025
இன்றைய அடிப்படையான பிரச்னை ஒரு சமூகத்துக்கு இரண்டு சான்றிதழ் ஏன் என்பதுதான்?. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் சீர்மரபு இனம் (டிஎன்சி) என்ற வகைப்பாடு இல்லை; இங்கு மட்டும் ஏன் என்ற கேள்விக்கு சரியான விடை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.
இந்திய சமூகம் ஐரோப்பிய நாடுகளைப் போன்றதல்ல. இது முற்றிலும் சமூகம் சார்ந்தது. இதன் சமூகக் குழுக்கள் ஒவ்வொன்றும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்டது. இதை அறிந்துதான் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், இந்திய சமூகத்தின் இயங்கியல் மையப்புள்ளி சமூக நீதி என்றார்.
ஆனால், இதை நிறைவேற்றுவதில் தான் பிரச்னைகள் வந்து விடுகின்றன. அரசியலமைப்புச் சட்டம் தந்த உறுதிமொழிகளால், அதை நிறைவேற்றித் தர முடியவில்லை. ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் சட்டப் பிரச்னைகளையும், சமூக மோதல்களையும் சந்திக்கும் அபாயத்தைத் தந்து விடுகிறது. சமூக நீதியை சரியாகப் புரிந்து கொள்வதில்தான் அடிப்படையான சிக்கல் இருக்கிறது.
முதலில் சமூக நீதியை சலுகை என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. உரிமை என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு காலத்தில் சமூகம் தந்த கொடுமையை அதே சமூகத்துக்குச் சரி செய்து கொடுக்கும் உயர் கடமையாகக் கருத வேண்டும். இந்த சமூக நீதியில் மற்றும் ஒரு சமூக நீதி வேண்டும் என்ற குரல் எழுந்துவிடக் கூடாது.
பாதிப்புக்கு ஏற்ப வழங்கப்படும் சமூக நீதியைத்தான், சம நீதி என்கிறோம். இன்றைய சமூக நீதியில் சம நீதி இல்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதில் அரசு இயந்திரம் எந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறது என்பதை வெளிப்படையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
எந்த தேசத்தின் வளர்ச்சியையும், மக்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அதிலும் மக்களை ஒன்றுபடுத்தாமல் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்த முடியாது. இதற்கு ஒற்றுமைதான் அவசியம் என்றால், அதற்கான முன்நிபந்தனை சமூக நீதியாக மட்டுமே இருக்க முடியும். நீதியற்ற சமூகத்தில் எவ்வாறு மனப்பூர்வமாக மக்கள் ஒருங்கிணைவார்கள். மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமை இல்லாமல் ஒற்றுமையும் சாத்தியமில்லை; வளர்ச்சியும் சாத்தியமில்லை.
பிரிட்டிஷ் கடலோடிகளால் இந்திய அரசர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வது மிகவும் சுலபமாக இருந்தது. காடுகள், மலைகள், கடற்கரை பெரும் மணல் பரப்பு என்ற பிரிந்து கிடந்து, சமூகம் சமூகமாக வாழ்ந்து வந்த இனக்குழுக்களை இவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. இவர்களது துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அவர்களிடம் செல்லுபடியாகவில்லை. அந்தப் பிரதேசங்களுக்குச் சென்ற அந்நியர்கள் திரும்பி வரவும் இல்லை.
Cette histoire est tirée de l'édition July 18, 2025 de Dinamani Madurai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Madurai
Dinamani Madurai
தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.
1 min
January 09, 2026
Dinamani Madurai
வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.
1 min
January 09, 2026
Dinamani Madurai
சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.
1 min
January 09, 2026
Dinamani Madurai
ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Madurai
வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்
சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.
1 mins
January 09, 2026
Dinamani Madurai
வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
2 mins
January 09, 2026
Dinamani Madurai
தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்
அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
January 09, 2026
Dinamani Madurai
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Madurai
தொட்டனைத் தூறும் மணற்கேணி...
ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
2 mins
January 09, 2026
Dinamani Madurai
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும்
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
January 08, 2026
Translate
Change font size
