Essayer OR - Gratuit
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை
Dinamani Kanchipuram
|March 14, 2025
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை, மார்ச் 13:
தமிழகத்தில் உள்ள 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் தினமும் சுமார் ரூ.100 கோடிக்கு மது விற்கப்படுகிறது. தற்போது தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக வி. செந்தில் பாலாஜி உள்ளார். டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பெருமளவு முறைகேடு நடைபெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்தப் புகார்களிலும், குற்றச்சாட்டுகளிலும் இருந்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அண்மையில் விசாரணையைத் தொடங்கினர். அதேபோல டாஸ்மாக் அதிகாரிகள் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் ஊழல் தடுப்புத் துறையினர் பதிவு செய்த சுமார் 35 வழக்குகளையும் அமலாக்கத் துறையினர் தங்களது விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
அமலாக்கத் துறை சோதனை: இந்நிலையில், அமலாக்கத் துறையினர் தமிழகம் முழுவதும் சுமார் 25 இடங்களில் கடந்த வாரம் 3 நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், தியாகராயநகர் திலக் சாலையில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு மதுபான நிறுவனம், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்என்ஜெ மதுபான நிறுவனம், அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கு உள்ளிட்ட 7 இடங்கள் மற்றும் விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மதுபான ஆலைகள், நிறுவனங்கள், கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களின் வீடு ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது.
Cette histoire est tirée de l'édition March 14, 2025 de Dinamani Kanchipuram.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Kanchipuram
தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
May 19, 2026
Dinamani Kanchipuram
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Kanchipuram
பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Kanchipuram
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani Kanchipuram
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Kanchipuram
அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு
முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து
1 min
May 19, 2026
Dinamani Kanchipuram
6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Kanchipuram
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Kanchipuram
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Translate
Change font size

