Facebook Pixel வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு! | Dinamani Erode & Ooty - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!

Dinamani Erode & Ooty

|

January 01, 2026

நம் அனைவருக்கும் எண்ணற்ற அனுபவங்களை தந்த ஆண்டாக 2025 நிச்சயம் இருந்திருக்கும்.

- முனைவர் பவித்ரா நந்தகுமார்

வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!

ஒரு சிலருக்கு ஆகச் சிறந்த அனுபவங்களையும், சிலருக்கு மிகக் கடுமையான பாடங்களையும், இன்னும் சிலருக்கு வேகமாக கடந்து போன ஆண்டாகவும், பலருக்கு எந்த மாற்றமும் இன்றி வெகு சாதாரணமாக கழிந்த ஆண்டாகக் கூட இருந்திருக்கும். ஆனாலும், ஒரு புது ஆண்டு தொடங்க இருக்கிறது எனும் போது எல்லோருக்குள்ளும் புதுப்புது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஏற்படத்தான் செய்கின்றன. நம் வாழ்வில் ஒவ்வொரு தொடக்கத்திற்கு முன்பும் சில தீர்மானங்களை கட்டமைக்க மனம் உறுதி ஏற்கும்.ஒரு புதிய சுழற்சி வாழ்வில் தொடங்கப்பட்டால் நமக்குள்ளும் பல வைராக்கியங்கள் உருவாகும். அதைத் தீவிரமாக் கடைப்பிடித்துச் செயல்படுத்துவதில் இருக்கிறது அவரவர் வெற்றி. பொதுவாகவே புத்தாண்டுக்கு பலரும் பல சபதங்களை ஏற்பது வழக்கம். இருப்பினும், பலருக்கு அது இரண்டொரு மாதங்களிலேயே நீர்த்துப் போய்விடுவதும் உண்டு.

புத்தாண்டு பிறந்தாலே பெருவாரியானவர்களுக்கு நாள்குறிப்பை பார்த்ததும் பெரிய உற்சாகம் ஏற்படும். ஜனவரி, பிப்ரவரியில் அடை மழைபோல் பக்கங்கள் எல்லாம் நிரம்பியிருக்க, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மாதம் மும்மாரி பொழிந்ததுபோல் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும். பின்னர் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் சிறு தூறலாகிப் போய் செப்டம்பர், அக்டோபரில் வறட்சிக் காலமாகி நவம்பர், டிசம்பரில் 'கிணற்றையே காணோம்' கதையாக நாள்குறிப்பையே எங்காவது தொலைத்திருப்போம். இது பலரது வாழ்விலும் நடந்திருக்கும் நகைச்சுவைதான்.

ஆனாலும், புத்தாண்டு என்றதும் எடுக்கப்பட்ட சபதங்கள் காலப்போக்கில் கரைந்து போனாலும் புதுப்புது முன்னெடுப்புகள் ஒவ்வொருவருக்கும் அவசியம்தான். அதுதான் நம் வாழ்வை சலிப்பிலிருந்து உற்சாகம் நோக்கி மடைமாற்றும். உடற்பயிற்சி செய்ய, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள, தவறான பழக்கங்களை நிறுத்த, புத்தகங்கள் வாசிக்க, சுற்றுலா செல்ல, புது மொழி கற்க, புதுக் கலை பழக, நேர்மறையாக இருக்க, குடும்பத்துடன் நேரம் செலவிட, புதிய படிப்பில் சேர என ஒவ்வொருவரும் விதவிதமான சபதம் ஏற்றிருப்பார்கள். ஆனால், நாம் அனைவருமே கைக்கொள்ள வேண்டிய மனநிலை ஒன்று இருக்கிறது; அது பொறுப்புணர்வு.

PLUS D'HISTOIRES DE Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது(படம்).

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல

மத்திய கல்வி அமைச்சகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Erode & Ooty

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Listen

Translate

Share

-
+

Change font size