Essayer OR - Gratuit

மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?

Dinamani Dharmapuri

|

July 28, 2025

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.

- அறச்சலூர் இரா.செல்வம்

ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய 'சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு 'தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.

மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.

55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களைத் தீவனமாக்கி, இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போதுதான் அந்த ஆபத்து புரியும்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படிகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.

மேலும், அவை வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்துத் தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிகச் சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சு: முதல்வர்

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 min

February 04, 2026

Dinamani Dharmapuri

தங்கம் பவுனுக்கு ரூ.2,560 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங் கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

February 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம்

அவைத் தலைவரை நோக்கி காகிதம் வீசியதால் நடவடிக்கை

time to read

2 mins

February 04, 2026

Dinamani Dharmapuri

2019 முதல் 7,400 நக்ஸல்கள் கைது: மக்களவையில் அரசு தகவல்

கடந்த 2019ஆம் ஆண்டுமுதல், நாட்டில் 7,400-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

February 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கர்நாடக பேரவையில் வி.ஜி. ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வி.ஜி. ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை தீர்மானம் தாக்கல் செய்தார்.

time to read

1 min

February 04, 2026

Dinamani Dharmapuri

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.4,479 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.

time to read

1 min

February 02, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.

time to read

1 min

February 02, 2026

Dinamani Dharmapuri

வளர்ச்சி, நிதி ஒழுங்கு இணைந்த பட்ஜெட்

9-ஆவது முறையாக தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

time to read

1 mins

February 02, 2026

Dinamani Dharmapuri

2, 3-ஆம் நிலை, கோயில் நகரங்கள் மேம்பாட்டுக்கு தலா ரூ.5,000 கோடி

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், கோயில் நகரங்கள் ஆகியவற்றை மேம்படுத்த நகர்ப்புற பொருளாதார பிராந்திய திட்டம் செயல்படுத்தப்படும்; இதற்காக தேர்வு செய்யப்படும் பிராந்தியங்களுக்கு தலா ரூ.

time to read

1 min

February 02, 2026

Dinamani Dharmapuri

விபி-ஜிராம் ஜி திட்டத்துக்கு ரூ.95,692 கோடி

முந்தைய திட்டத்துக்கு ரூ.30,000 கோடி

time to read

1 min

February 02, 2026

Translate

Share

-
+

Change font size