Essayer OR - Gratuit
ஆதித் தமிழ்க்குடியின் தொன்மை முருகன்
Dinamani Dharmapuri
|July 21, 2025
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கார்த்திகேயன், சுப்ரமணியன் என்று முருகன் வழிபாடு இருந்தாலும் கந்தன், கடம்பன், முருகன் என்றும், குன்றுகள் தோறும் இடம்பெற்றிருக்கும் குமரன் என்றும் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் பெருமையோடு கொண்டாடி மகிழ்கிற தனித்துவம் முருகனுக்கு மாத்திரம்தான்.
உலகில் தொன்மையான செம்மையுறத்தக்க மொழியாக இரண்டு மொழிகள் திகழ்கின்றன. அவை தமிழ் மொழி, மற்றொன்று வடமொழியான சமஸ்கிருதம். வடமொழி பேச்சு வழக்கில் இல்லை. இலக்கிய வழக்கு மட்டுமே உண்டு. ஆனால், தமிழ் மொழியில் பேச்சும், இலக்கிய வழக்கும் ஒன்றாகச் சேர்ந்து செழிப்பான மொழியாக திகழ்கிறது.
தமிழில் கிடைத்திருக்கும் ஆகச் சிறந்த நூல்களில் சங்க இலக்கியங்கள் தலைசாய்த்து ஆகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்க்கணக்கு நூல்களில், பத்துப்பாட்டு முதல் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக திருமுருகாற்றுப்படை திகழ்கிறது. முருக பக்தனை ஆற்றுப்படுத்துதலே திருமுருகாற்றுப்படை என்று அழைக்கப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் முருகன் குறித்து வழங்கும் பெயர்கள் மிகுதியாக இருக்கின்றன. இந்தப் பெயர்கள் அனைத்தும் அவற்றின் சூழல்களின் அடிப்படையில் வேறுவேறாக அமைந்திருக்கின்றன. சேவற்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அனங்கு, கடவுள், மலைவாழ், விரல்வேல், மலைஉரைகடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்முருகன் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.
ஒரு வறியவன் தன் இன்னல்களில் இருந்து விடுபட முருகனைச் சென்று பார்த்துப் பாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது திருமுருகாற்றுப்படை. உண்மையில் ஆற்றுப்படை என்பதுதான் மருவி ஆறுபடை என்றாகி விட்டது.
அதேசமயம், முருகனுக்கு ஆறு என்பது உகந்தது. அவரை பக்திப்பூர்வமாக பூசிகிற போது ஆறு இதழ்களைக் கொண்ட மலர்களைக் கொண்டு மலர்மாலை சூடுகிறார்கள்.
முருகனிடம் இருக்கும் வேல் வெறுமனே கீழ்ப்பகுதி அகன்றும், மேல் பகுதி முனை கூர்மையாக இருப்பது மட்டுமல்ல; வேலின் இரண்டு பக்கங்களும் மேடு தட்டி இருக்கும். அதைக் கணக்கிட்டால் கூட ஆறுமுனைகள் கொண்டதாக இருக்கும். ஆறு முகங்களை உடையதாக நாம் முருகனை வணங்கியும் வருகிறோம். இதனால், ஆற்றுப்படை என்பது ஆறு படையாக மருவி இருக்கிறது.
Cette histoire est tirée de l'édition July 21, 2025 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சி அரங்கில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
1 mins
April 27, 2026
Dinamani Dharmapuri
கோடை விடுமுறை: ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் மற்றும் ஏற்காடு பகுதிகளில் ஆயி ரக்கணக்கான சுற்றுலாப் பயணி கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்த னர்.
2 mins
April 27, 2026
Dinamani Dharmapuri
அருணாசலேஸ்வரர் கோயில் வசந்த உற்சவம்: வெட்டிவேர் பல்லக்கில் வலம் வந்த சுவாமி
அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆம் நாள் நிகழ்வில் சுவாமி வெட்டிவேர் பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்தார் (படம்).
1 min
April 27, 2026
Dinamani Dharmapuri
தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது.
2 mins
April 27, 2026
Dinamani Dharmapuri
பொறுப்பால் உயரும் பெருமை!
தலைமை மனது வைத்தால், தகரமும் கூட தங்கமாக மாறிவிடும்.
3 mins
April 27, 2026
Dinamani Dharmapuri
காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் முன்னோடி
'காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னோடியாக திகழ்கின்றன' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 mins
April 27, 2026
Dinamani Dharmapuri
பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள்: மத்திய அமைச்சர் ஆலோசனை
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள் அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
April 27, 2026
Dinamani Dharmapuri
ஆலங்குடி கோயிலில் மே 26-இல் குருப்பெயர்ச்சி விழா
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் வரும் மே 26-ஆம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.
1 min
April 27, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரர்கள் உடனடி வெளியேற்றம்
அமித் ஷா வாக்குறுதி
1 min
April 27, 2026
Dinamani Dharmapuri
ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்
பொதுத் துறை வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு நடைமுறையை அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்யும்படி, அந்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
April 27, 2026
Translate
Change font size

