Essayer OR - Gratuit
சிபிஐ விசாரணை அறிக்கையை ஆக. 20-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு
Dinamani Dharmapuri
|July 09, 2025
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு
-
மதுரை, ஜூலை 8: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடர்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித் குமாரை தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, கடந்த மாதம் 28-ஆம் தேதி தனிப்படை போலீஸாரால் அஜித்குமார் அடித்துக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், அஜித்குமார் மரணம் குறித்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர்கள் மாரீஸ்குமார், கார்த்திக்ராஜா, மகாராஜன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முழு விசாரணையைத் தொடங்க வேண்டும். விசாரணை அறிக்கையை ஜூலை 8 -இல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
Cette histoire est tirée de l'édition July 09, 2025 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்
இன்று திருக்கல்யாணம்
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு
கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாருக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத் ததாகக் கூறி தேர்தல் ஆணை யம், வருமான வரித் துறை விசா ரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்த ரவிட்டது.
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
15 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 3 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு
வேலூர், பரமத்தி வேலூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 15 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகப் பதிவானது.
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
ரக்பி ப்ரீமியர் லீகில் மகளிர் அணிகள் அறிமுகம்
ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ், ரக்பி இந்தியாவுடன் இணைந்து, எச்எஸ்பிசி ரக்பி பிரீமியர் லீக் (ஆர்பிஎல்) நடைபெறவுள்ள தொடரில் 4 மகளிர் அணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
2020 தில்லி கலவரம்: 12 பேர் விடுதலை
2020-இல் வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 12 பேரை விடுவித்து தில்லியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைது
கர்நாடகத்தில் பொது நுழைவுத் தேர்வின்போது பிராமண சமுதாய மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பெங்களூரு நகர்ப்புற மாவட்ட ஆட்சியர் ஜி. ஜெ கதீஷா தெரிவித்தார்.
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு
அமித் ஷா உறுதி
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
இறுதிச் சடங்கு ஊர்வலங்கள்: புதிய சட்ட முன்வரைவுகளை அரசு பரிசீலிக்க உத்தரவு
இறுதிச் சடங்கு ஊர்வலங்களில் மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தக்கூடிய புதிய சட்ட முன்வரைவுகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தர விட்டது.
1 min
April 28, 2026
Translate
Change font size

