Essayer OR - Gratuit

என் மீதான குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் பொய்யானவை: அன்புமணி ராமதாஸ்

Dinamani Dharmapuri

|

June 20, 2025

என் மீதான குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் பொய்யானவை; பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக கடந்த 27 ஆண்டுகளாக உழைத்து வருகிறேன் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சேலம், தருமபுரி, ஜூன் 19:

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

அவருக்கு பிரம்மாண்டமான பழமாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கடந்த சில வாரங்களாக குழப்பம் நிலவி வருகிறது. என்மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து குற்றச்சாட்டுகளும் 100 சதவீதம் பொய்யானவை. இதுகுறித்து இன்னும் சில நாள்களில் தெளிவாக தெரியப்படுத்துவேன்.

நம் கட்சிக்காக, சமுதாயத்திற்காக மிகுந்த சுமையை அமைதியாக சுமந்துகொண்டிருக்கிறேன். கட்சித் தலைவர் பொறுப்பு பொதுக்குழுவில் தொண்டர்கள் கொடுத்தது. பொதுக்குழுவில் என்னையும் மற்ற நிர்வாகிகளையும் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுத்தனர்.

கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

கடந்த 27 ஆண்டுகளாக அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். முதன்முதலில் நான் கட்சிக்கொடியை ஏற்றியது சேலம் மேற்கு தொகுதியில்தான். கட்சி நிர்வாகிகள் அளித்த தைரியத்தில்தான் நான் இருக்கிறேன்.

PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2,668 அடி உயர மலை உச்சியில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Dharmapuri

மார்க்ரம் அபாரம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை

தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Dharmapuri

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

6 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 4) 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

உள்ளூர் மொழியறிதல் அவசியம்!

அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.

time to read

2 mins

December 04, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Translate

Share

-
+

Change font size