Essayer OR - Gratuit
அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!
Dinamani Cuddalore
|May 09, 2025
அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.
அண்மைக் காலமாக நாடு இதுவரை சந்தித்திராத சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. நம்முடைய அரசியல் சாசனம் மிகவும் விரிவானது. ஆட்சியினர், அதிகார வர்க்கம், நீதித்துறை எனத் தனித்தனி அதிகாரங்களோடு மூன்று பிரிவுகளாக வரையறுக்கப்பட்டு, நாடு இயங்குகிறது. ஒன்றோடு ஒன்று உராய்வதும் உண்டு. எழுதி வைக்கப்பட்டுள்ள சாசனத்தின்படி அந்த உராய்வுகளுக்குத் தீர்வு காணப்படுவதுமுண்டு. உச்சநீதிமன்றத்தைக் 'குடியாட்சியின் காவல் நாய்' என்று கூறுவர். அரசியல் சாசனமே உயர்ந்தது என்று அதற்குத் தனிப்பு கழ் பாடுவோரும் உண்டு. எந்த அரசியல் சாசனமும் மனிதர்களால் ஆக்கப்படுவதுதான். அதை ஆக்கும் மனிதர்களின் அறிவுத் திறம், நேர்மைத் தரத்தை ஒட்டி அந்தச் சாசனம் சிறப்புறுகிறது. இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட காலம் அறம் பிறழாச் சான்றோர்கள் நாட்டின் தலைமைகளில் இருந்த காலம். நேரு, வல்லபபாய் படேல், அம்பேத் கர், கிருபளானி, செயப்பிரகாசு நாராயணன், இராசாசி என நிகரற்ற அறிஞர்களும் மழை பெய்யென்று இவர்கள் கட்டளையிட்டால் பெய்யும் என்று சொல்லத்தக்க அளவு நேரியர்களும் சேர்ந்து விவாதித்து விவாதித்து உருவாக்கிய அரசியல் சாசனம் நம்முடையது. இந்தியத் தலைமையமைச்சராய் இருந்த மொராச்சி தேசாய் ஒருமுறை சொன்னார்: குற்றவியல் சட்டத்தைக் கிழித்தெறிந்து விட்டாலும், என்னால் எந்தத் தப்பும் செய்ய முடியாது. இப்படி அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது. பேரரசன் அசோகனுக்குப் பிறகு அறம் கோலோச்சிய காலம் அது தான். நியாயமே எல்லாவற்றிலும் பெரியது. தனிமனித வாழ்வாயினும், ஆட்சி அதிகாரமாயினும் நியாயத்தை மையமாகக் கொண்டே சிந்தித்தும் வாழ்ந்தும் பழக்கப்பட்ட தலைமுறையினர் வடித்த அரசியல் சாசனம் என்பதால் அவர்கள் இன்னொரு பக்கத்தைப் பார்க்கத் தவறிவிட்டனர். அந்த இன்னொரு பக்கம்தான் இன்றைய குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். ஒரு மந்திரி போக்குவரத்துத் துறையில் இருந்தார். ஓட்டுநர், நடத்துநர் வேலைகளுக்கு ஆளெடுத்தபோது, அவர்களுக்கு அந்த வேலைகளைத் தருவதற்காக இலஞ்சம் வாங்கினார் என்பது குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்கு கொஞ்ச
Cette histoire est tirée de l'édition May 09, 2025 de Dinamani Cuddalore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Cuddalore
Dinamani Cuddalore
திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா
பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
1 min
December 03, 2025
Dinamani Cuddalore
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Dinamani Cuddalore
பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்
தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.
1 min
December 03, 2025
Dinamani Cuddalore
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
3 mins
December 03, 2025
Dinamani Cuddalore
மக்கள் பணத்தில் பாபர் மசூதியை கட்ட நேரு விரும்பினார்
'மக்களின் பணத் தைக் கொண்டு பாபர் மசூதியைக் கட்டுவதற்கு நாட்டின் முதல் பிரத மரான ஜவாஹர்லால் நேரு விரும் பினார்; ஆனால் அவரது இத்திட் டம் வெற்றி பெற அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அனும திக்கவில்லை’ என்று மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
2 mins
December 03, 2025
Dinamani Cuddalore
மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு
மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது
1 min
December 03, 2025
Dinamani Cuddalore
காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவ ரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Cuddalore
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Cuddalore
காசி - தமிழ் சங்கமம் - தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை: எல்.முருகன்
காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
December 02, 2025
Dinamani Cuddalore
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Translate
Change font size

