Essayer OR - Gratuit
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்
DINACHEITHI - NELLAI
|May 21, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
-
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி. வில்சன் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராணிமேரி கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில "தமிழ்ப்புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ன்றையதினம் திறந்து வைக்கப்பட்ட இ கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடங்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.269.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, இராணி மேரி கல்லூரியில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடம் இராணி மேரி கல்லூரியில் 22.11.2022 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், இராணி மேரி கல்லூரி வளாகத்திலேயே மாணவியர் தங்கிப் படிப்பதற்கு ஏதுவாக விடுதி ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என மாணவியர்கள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை உடனே ஏற்றுக் கொண்டு விழா மேடையிலேயே விடுதி கட்டித் தரப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
Cette histoire est tirée de l'édition May 21, 2025 de DINACHEITHI - NELLAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.
1 min
October 11, 2025
DINACHEITHI - NELLAI
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்
அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
1 min
October 11, 2025
DINACHEITHI - NELLAI
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்
1 min
October 10, 2025
DINACHEITHI - NELLAI
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க வேண்டும்
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
October 10, 2025
DINACHEITHI - NELLAI
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
எல்லை மீறி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டு, மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
1 mins
October 10, 2025
DINACHEITHI - NELLAI
காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 09, 2025
DINACHEITHI - NELLAI
கரூர் கூட்டநெரிசல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக த.வெ.க. மேல்முறையீடு
சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min
October 09, 2025
DINACHEITHI - NELLAI
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
1 mins
October 09, 2025
DINACHEITHI - NELLAI
'சென்னை ஒன்' செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
October 08, 2025
DINACHEITHI - NELLAI
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
பலியான 13 வயது சிறுவனின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
1 min
October 08, 2025
Translate
Change font size