Facebook Pixel ஆங்கிலம் அவமானத்தின் மொழி... அல்ல அறிவின் மொழி... | DINACHEITHI - KOVAI - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

ஆங்கிலம் அவமானத்தின் மொழி... அல்ல அறிவின் மொழி...

DINACHEITHI - KOVAI

|

June 22, 2025

அவரவர் பிள்ளை அவரவருக்கு செல்லம் என்பது போல், அவரவர் தாய்மொழி அவரவருக்கு பெரிது. ஆனால், இந்துத்துவ மதவாத ஆட்சியில், இந்தித்துவ மொழிவாதம் களை கட்டுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் தாய் மொழிகளை அளித்தாவது இந்திக்கோ சமஸ்கிருதத்துக்கோ அரியணை அளித்து விட வேண்டும் என்ற ஆத்திரமும் அவசரமும் பாஜக ஆட்சியாளர்களின் வாயிலிருந்து அடிக்கடி கொப்பளிக்கிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஸ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, "இந்திய மொழிகள் நம் கலாசாரத்தின் ரத்தினங்கள்" என்றார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. "இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அப்படியான சமூகம் உருவாகுவது வெகு தொலைவில் இல்லை." என்று ஆங்கிலத்தை கடுமையாக சாடி விட்டார்.

ஒய் திஸ் கொலை வெறி?

"நமது நாட்டை, நமது கலாச்சாரத்தை, நமது வரலாற்றை, நமது மதத்தைப் புரிந்து கொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான வெளிநாட்டு மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது." என்கிறார். சரிதான், அவரவர் தாய்மொழியில் அவரவர் வரலாறும் பண்பாடும் கலாச்சாரமும் வாழ்வியலும் இழையோடுவது இயல்புதான். ஆனால் எடுத்ததற்கெல்லாம் 'நாங்கள், நாங்கள்' என்பது போல், ' நம் மொழி, நம் மொழி' என்கிறாரே, இந்தியாவில் யாரைப் பார்த்து அவ்வாறு சொல்கிறார்? ஒரு மலையாளியை பார்த்து, 'நம் மொழி' என்றால், அவர் 'மலையாளம்' என்பர். கன்னடரை பார்த்து நம்ம மொழி என்றால்,' கன்னடம்' என்பார். பொதுவான ஒரு மொழி இல்லாத நிலையில் தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இந்தியாவில் ஏற்கப்பட்டது. அது இயல்பாகவே இந்தியர்களுக்கு பொருந்தி விட்டது. அதுமட்டுமின்றி ஆங்கில மூலம் பல்வேறு அறிவியல் தளங்களை அடைவதற்கு வசதியாகிவிட்டது. இவ்வாறு இருக்க, மீண்டும் கருவறை புகும் ஆவேசத்தில் இவ்வாறு ஆர்ப்பரிப்பது எவ்வித பயனை தரும் என்று தெரியவில்லை.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வி.சி.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - KOVAI

கடும் வெயிலால் பொதுமக்கள் தவிப்பு: சென்னையில் மேலும் 2 நாட்கள் வெப்ப அலை நீடிக்கும்

கோடை காலத்தில் சென்னையில் ஏற்பட்ட காலமாற்றத்தால் வங்க கடலில் இருந்து ஈரப்பதம் கொண்ட வடகிழக்கு கடல் காற்று வீசியதால் நேற்று வெப்பம் தணிந்து இருந்தது.

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக இந்தியா மாறும்: ராஜ்நாத் சிங் பேச்சு

மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையும், தனியார் துறையின் புதிய கண்டுபிடிப்புகளும் ஒன்றாக இணையும்போது, நாடு புதிய உச்சங்களை தொடும் என ராஜ்நாத் சிங் கூறினார்.

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஆப்பிரிக்க பயணத்தை தவிர்த்து விடுங்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், எபோலா வைரஸ் பரவலாக பரவி வருகிறது.

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - KOVAI

முதல் அமைச்சர் விஜய் உறுதி

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று, முதல் அமைச்சர் விஜய் உறுதியாக கூறி இருக்கிறார்.

time to read

1 mins

May 24, 2026

DINACHEITHI - KOVAI

‘மாஸ்டர் பிளான்’ உடன் டெல்லி செல்ல தயாராகும் முதல்-அமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. முன்பு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக விலை உயர்ந்தது

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - KOVAI

கோவை சிறுமி கொலை: தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீசு

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - KOVAI

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: புதுக்கோட்டை முதலிடம்

2025 - 26 ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

time to read

1 min

May 21, 2026

DINACHEITHI - KOVAI

காங்கிரஸ் அமைச்சர்கள் உட்பட புதிய மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள்

முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் பதவி ஏற்கிறார்கள் . புதிய அமைச்சர்களுக்கு ஆளுனர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

time to read

1 min

May 21, 2026

Translate

Share

-
+

Change font size