Essayer OR - Gratuit
2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
DINACHEITHI - CHENNAI
|June 21, 2025
சென்னை ஜூன் 21தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (20.6.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம்-கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
-
மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூ.36.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், துணை வேந்தர், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான குடியிருப்புகளைத் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், அதன் வாயிலாகப் பரவலாக உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டுப் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலப் "தமிழ்ப் புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
Cette histoire est tirée de l'édition June 21, 2025 de DINACHEITHI - CHENNAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
ஆட்சி அமைப்பது தொடர்பாக தவெக மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது.
1 min
May 05, 2026
DINACHEITHI - CHENNAI
மே. வங்காளத்தில் பாஜக - கேரளாவில் காங்கிரஸ் - புதுச்சேரியில் ரெங்கசாமியின் கூட்டணி
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
1 min
May 05, 2026
DINACHEITHI - CHENNAI
மெஜாரிட்டியை பெற முக்கிய ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.
1 mins
May 05, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி
மெஜாரிட்டியை பெற முக்கிய ஆலோசனை
1 mins
May 05, 2026
DINACHEITHI - CHENNAI
மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு தொடங்கியது
நாடு முழுவதும் 22.79 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்
1 mins
May 04, 2026
DINACHEITHI - CHENNAI
வாக்கு எண்ணும் மையங்களில் பாஜகவினர் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி
தி.மு.க. குற்றச்சாட்டு
1 min
May 04, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு இன்று வாக்கு எண்ணிக்கை
சென்னையில் கொடி அணிவகுப்பு
2 mins
May 04, 2026
DINACHEITHI - CHENNAI
கொல்கத்தாவில் 60 நாட்களுக்கு 144 தடை – இன்று முதல் அமல்
மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
1 min
May 03, 2026
DINACHEITHI - CHENNAI
நாளை வாக்கு எண்ணிக்கை உடனுக்குடன் 5 மாநில தேர்தல் முடிவுகள்: புதிய இணையதள முகவரி வெளியீடு
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
1 min
May 03, 2026
DINACHEITHI - CHENNAI
விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு?
இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வளைகுடா நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அவற்றை பெட்ரோல் டீசல் ஆக சுத்திகரித்து நமக்கு விற்பனை செய்கின்றன.
1 mins
May 03, 2026
Translate
Change font size
