கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார், பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஜோ திமணி ஆகியோரை ஆதரித்து கோவையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: தமிழக மக்களை நான் எப்போதும் விரும்புகிறேன். தமிழர்களின் மொழி, வரலாறு, கலாசாரம் போன்றவை எனக்குப் பல்வேறு தருணங்களில் வழிகாட்டியாக அமைந்திருக்கின்றன. இப்போது நடைபெறுவது சாதாரணமான தேர்தல் அல்ல, இது சித்தாந்த ரீதியிலான போர்.
அதானியின் தொழிலதிபர் அரசு: மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து மோடி அரசு விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மோடி அரசு என்று நான் கூறினாலும் உண்மையில் அது தொழிலதிபர் அதானியின் அரசுதான். ஏனெனில் பிரதமர் மோடி எல்லா வேலைகளையும் கவே செய்கிறார்.
அதானிக்கா அதானிக்கு இவ்வாறு சலுகை காட்டுவது பற்றி நாடாளுமன்றத் தில் பேசினேன். உடனே எனது எம்.பி. பதவியைப் பறித்தனர்.
அரசு எனக்குக் கொடுத்திருந்த வீட்டையும் பறித்தனர். ஆனால், வீட்டை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஏனெனில் தமிழகத்திலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களில் எனக்கு வீடு உள்ளது.
பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது எனக்கு தோசை பிடிக்கும் என்கிறார். தில்லி சென்றதும் ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்கிறார். பிரதமர் மோடி தமிழர்களின் வரலாறு, கலாசாரத்தை தாக்குகிறார்.
தமிழக விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை, பணமதிப் பிழப்பு, ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகத்தின் ஊழல்: பிரதமர் மோடி முதலில் மிகப்பெரிய தான் அரசியலை சுத்தப்படுத்துகிறேன் என்றார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டம் சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விவரங்களை வெளியிடச் சொன்னதால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பாஜகவுக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
Esta historia es de la edición April 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición April 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நான்கு கட்டங்களில் 270 தொகுதிகளில் வென்றுவிட்டோம்
‘மக்களவைக்கு நடந்து முடிந்த நான்கு கட்ட தோ்தல்களில், பிரதமா் மோடிக்கு 270 தொகுதிகளில் வெற்றி கிடைத்துவிட்டது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அமேதி, ரேபரேலியில் சம வளர்ச்சி
உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அந்த இரு தொகுதிகளிலும் சமமான வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தாா்.
பார்சிலோனாவுக்கு மெஸ்ஸி ஒப்பந்தமாக பயன்பட்ட காகிதம் ரூ.8 கோடிக்கு ஏலம்
ஆா்ஜென்டீன கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி, பாா்சிலோனா எஃப்சி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதற்காக உறுதியளிப்பதற்கு பயன்பட்ட நேப்கின் (முகம் துடைக்கும் சிறிய காகிதத் துண்டு) ரூ.8 கோடிக்கு வெள்ளிக்கிழமை ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
வெற்றியுடன் நிறைவு செய்தது லக்னௌ
ஐபிஎல் போட்டியின் 67-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
ரிஷி சுனக், அக்ஷதா மூர்த்தி சொத்து அதிகரிப்பு
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், அவா் மனைவி அக்ஷதா மூா்த்தியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு சுமாா் ரூ.160 கோடி அதிகரித்துள்ளது.
பிரான்ஸ்: யூத வழிபாட்டுத் தலத்துக்கு தீ வைத்தவர் சுட்டுக் கொலை
பிரான்ஸிலுள்ள யூத வழிபாட்டுத்தலத்துக்கு தீவைத்த இளைஞரை அந்த நாட்டு காவலா் சுட்டுக் கொன்றாா்.
தேர்தலில் மறுசீரமைப்பு நடவடிக்கை அவசியம்
நாட்டின் வளா்ச்சிக்காக பொருளாதாரம், நீதி, தோ்தல் ஆகியவற்றில் மறுசீரமைப்பு நடவடிக்கை அவசியம் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்துவிடுவர்
மத்தியில் காங்கிரஸ்-சமாஜவாதி ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமா் கோயிலை ‘புல்டோஸா்’ கொண்டு இடித்துவிடுவா் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
மருத்துவப் பல்கலை.யில் நாள்தோறும் மருத்துவப் பரிசோதனை
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக ஊழியா்கள், மாணவா்கள் நாள்தோறும் ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு பரிசோதனைகளை செய்து கொள்வதற்கான புதிய வசதி பல்கலைக்கழக வளாகத்துக்குள் தொடங்கப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம்: ககன்தீப் சிங் பேடி
முறையாக உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொண்டால் உயா் ரத்த அழுத்தத்தை தவிா்க்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.