Versuchen GOLD - Frei
முஸ்லிம்களுக்கான அரசியலை ஒழுங்குபடுத்துவது யாரின் பொறுப்பு?
Tamil Mirror
|September 16, 2025
முஸ்லிம்களுக்கான திட்டமிட்ட அடிப்படையிலான சமூக அரசியலை முன்கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்ற போதிலும், அப்பணியை யார் சரிவரச் செய்யப் போகின்றார்கள் என்ற கேள்வி அண்மைக்காலமாக பலரதும் அடிமனதில் அலைந்து திரிகின்றது.
முஸ்லிம் சமூகம் சார் அரசியலின் வரலாற்றுப் பின்னணியை, அது கடந்து வந்த பாதையை நன்கு அறிந்திருந்த சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தின் மூத்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களுக்காகக் குரல் கொடுத்த எம்.எச்.எம். அஷ்ரப், எம்.எச். சேகு இஸ்ஸ்தீன் போன்ற பல அரசியல்வாதிகளும் மரணித்து விட்டார்கள்.
குறிப்பாக, தனித்துவ அடையாள அரசியலின் அடிப்படைக் கோட்பாட்டை நன்கு அறிந்த எம்.ரி. ஹசன் அலி உள்ளிட்ட சிலர் இன்று செயற்பாட்டு அரசியலில் இல்லை.
ஆயினும், முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலுக்குள் மட்டுமன்றி பெருந்தேசியக் கட்சிகளின் ஊடாகவும் முஸ்லிம் சமூகம் பற்றிய 'முன்;- கதைகள்' எதுவும் தெரியாத பல அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆகி இருக்கின்றனர். இனி வரும் காலங்களிலும் இதுதான் நடக்கப் போகின்றது எனலாம்.
பண முதலீடும் கட்டமைக்கப்பட்ட தேர்தல் பிரசாரங்களும் ஒரு சிலரை எம்.பிக்களாக ஆக்கியுள்ளது. அனுரகுமார திசாநாயக்க என்ற ஆளுமை இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்ததன் காரணமாக அந்தக் கட்சியில் பல முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.
முஸ்லிம் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வோடு இளம் வயதிலிருந்தே பாடுபட்டு, தியாகங்களைச் செய்தவர்கள், இச்சமூகம் தொடர்பான வரலாற்றுக் குறிப்புக்களை அறிந்தவர்கள், முஸ்லிம்களின் அபிலாஷை என்னவாக இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை கொண்டவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக, தலைவர்களாக வருகின்ற போக்கு இப்போது இறங்குமுகமாக உள்ளது.
ஏனென்றால், முஸ்லிம் சமூகமும் பொதுவில் அப்படித்தான் உள்ளது. யார்? என்ன? செய்தாலும் பரவாயில்லை. யார் எம்.பியாக வந்தாலும், தலைவராக வந்தாலும் நமக்கென்ன கவலை. நாம் நமது வேலையைப் பார்ப்போம் என்ற மனப்பாங்கில்தான் கிட்டத்தட்ட முக்கால்வாசி முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு சமூகம் எப்படி இருக்கின்றதோ அது போலத்தான் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அமைவார்கள் என்ற முதுமொழியை நாம் யதார்த்தபூர்வமாகக் கண்டுகொண்டிருக்கின்றோம்.
முஸ்லிம் கட்சிகளின் சார்பாக இம்முறை பல பழைய முகங்களும் சில புதிய முகங்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Diese Geschichte stammt aus der September 16, 2025-Ausgabe von Tamil Mirror.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
