Facebook Pixel “பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்கவே வேண்டும்” | Tamil Mirror – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

“பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்கவே வேண்டும்”

Tamil Mirror

|

August 13, 2025

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம், செவ்வாய்க்கிழமை(12) அன்று கையளித்த எதிர்க்கட்சியினர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய பாதுகாப்பு அமைச்சரை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில், (1) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சதியின் அடித்தளமாகக் கருதப்படும் 2018 அரசியலமைப்பு விரோத சதியின் போது அதாவது 2018 நவம்பர் மாதத்தில் 17வது பாதுகாப்புப் படைப் பிரிவு (கிழக்கு) கட்டளைத் தளபதியாக அருண ஜயசேகர நியமிக்கப்பட்டதால், அதன் பிரகாரம் அவர் பாதுகாப்புப் படைப் பிரிவின் (கிழக்கு) கட்டளைத் தளபதியாகப் பதவியைப் பொறுப்பேற்றதாலும்; (2) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முக்கியமான தகவல்கள் பலவற்றை வெளிப்படுத்தி சந்தேக நபர்களைக் கைது செய்யும் வவுணதீவு பொலிஸ் காவலரணில் இலங்கை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரின் கொலை நடந்த சந்தர்ப்பத்தில் அருண ஜயசேகர அவர்கள் பாதுகாப்புப் படைப் பிரிவின் (கிழக்கு) கட்டளைத்தளபதியாக பணியாற்றியதாலும்; (3) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தீர்மானமிக்க நிகழ்வான சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தின் சம்பவம் தடந்த சந்தர்ப்பத்தில் கௌரவ அருண ஜயசேகர அவர்கள் பாதுகாப்புப் படைப் பிரிவின் (கிழக்கு) கட்டளைத் தளபதியாக பணியாற்றியதாலும்; (4) உரிய சம்பவம் தொடர்பில் விசாரணை தடத்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து இலங்கை இராணுவத்தின் சிலருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெற்றுள்ளதாலும்; (5) கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் குண்டுதாரி ஹஸ்துன் என்பவரின் மனைவி என அழைக்கப்படும் சாரா ஜஸ்மின் மறுபெயர் புவஸ்தினி மஹேந்திரன் சாய்ந்தமருதுவில் குறித்த இடத்தில் இருந்ததாகவும், குண்டு வெடித்த பின்னரும் அவர் உயிருடன் இருந்ததாகவும் சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா தெரிவித்துள்ளதால், குற்றப் புவனாய்வுத் திணைக்களமும் அவர் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட சம்பவம் சந்தேகத்துக்குரியது என்று தெரிவித்துள்ளதாலும்; (6) உரிய சாய்ந்தமருது சம்பவம் தொடர்பில் இப்போது விசாரணையைத் தொடங்கி, இராணுவத்தின் அப்போதைய நடவடிக்கைய

WEITERE GESCHICHTEN VON Tamil Mirror

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size