Versuchen GOLD - Frei

மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!

Dinamani Vellore

|

May 11, 2025

தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான்-2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்” என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இந்திய போர்விமான எஞ்சின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லி பாபு.

- -ந.முத்துமணி

வட சென்னையைச் சேர்ந்த இவர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியலில் முனைவர் பட்டமும், தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனது ஆராய்ச்சிப்பணிகளுக்கிடையே அறிவியல், தொழில்நுட்பம், கவிதைகள் என 13 புத்தகங்களை தமிழில் எழுதியிருக்கிறார்.

வியாசர்பாடியில் 'கலாம்-சபா' என்ற இளையோர் நூலகம்-வழிகாட்டி மையத்தை அமைத்திருக்கும் அவர், நாட்டில் புதிய அறிவியல் எழுச்சியை ஏற்படுத்த மாணவர்கள், இளைஞர்களைத் தவறாமல் சந்தித்து வருகிறார்.

அவரிடம் ஒரு சந்திப்பு:

தேசியத் தொழில்நுட்பத் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

1998 மே 11-இல் போக்ரானில் அணுசக்தி சோதனையில் இந்தியா வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி, பல துறைகளில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி தேசத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்த மே 11-ஆம் தேதி தேசியத் தொழில்நுட்பத் தினமாக, 1999-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

2001-இல் நிகழ்ந்த தேஜஸ் போர் விமானத்தின் முதல் வெள்ளோட்டம், 2008-இல் நடைபெற்ற சந்திரயான்-1 வெற்றி, 2012-இல் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை வெற்றி, 2019-இல் பெற்ற செயற்கைக்கோள் எதிர் ஏவுகணை 'சக்தி திட்டம்' வெற்றி, 2024-இல் நிகழ்ந்த சந்திரயான்-3 வெற்றி என இந்தியா தொழில்நுட்பத் தேசமாக தற்போது உலக அரங்கில் மிளிர்கிறது. இதைப் போல இன்னும் பல துறைகளில் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு இளையோரை ஆற்றுப்படுத்த தேசியத் தொழில்நுட்ப தினம் உத்வேகம் தரும்.

ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டைன் போன்ற வெளிநாட்டு விஞ்ஞானிகளின் பெயர்கள் பேசப்பட்ட இந்திய வகுப்பறைகளில், பின்னர் சி.வி.ராமன், விக்ரம் சாராபாய் போன்ற இந்தியப் பெயர்களும் சேர்த்து உச்சரிக்கப்பட்டன. படிப்படியாக அப்துல் கலாம், எம்.எஸ். சுவாமிநாதன், சிவதாணுப்பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, கே.சிவன் போன்ற இந்தியர்கள் பேசப்படுவது சுதந்திர இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வேர்களின் நீளத்தை அளக்காமலே நமக்கு அறிவிக்கிறது. இவர்கள் தமிழர்கள் என்பதில் நாம் மார்தட்டிக் கொள்ளலாம்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore

Dinamani Vellore

மார்ச் 30-இல் பார் கவுன்சில் தேர்தல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை வரும் மார்ச் 30-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

January 19, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியான இளைஞர்: ரூ.1.62 கோடி இழப்பீடு

2024, ஜூலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து 53 சதவீதம் மாற்றுத்திறனாளியான 21 வயது இளைஞருக்கு தில்லி மோட்டார் வாகன விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் ரூ.

time to read

1 min

January 19, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சிரியா: குர்து ஆயுதக் குழுவிடம் இருந்து முக்கிய நகரம் மீட்பு

சிரியாவின் கிழக்குப் பகுதியில் தீவிரமாக முன்னேறி வரும் அந்நாட்டு அரசுப் படைகள், குர்து இனத்தவர்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையினர் (எஸ்டிஎஃப்) கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரான தப்காவை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றின.

time to read

1 min

January 19, 2026

Dinamani Vellore

மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

time to read

1 min

January 19, 2026

Dinamani Vellore

இந்திய வாக்காளர்களின் முதல் தேர்வு பாஜக

பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 min

January 19, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

மிட்செல், கிளென் அதிரடி: தொடரைக் கைப்பற்றியது நியூஸி.

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது நியூஸிலாந்து.

time to read

2 mins

January 19, 2026

Dinamani Vellore

உ.பி.: அனுமதியின்றி காலி வீட்டில் தொழுகை நடத்திய 12 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலத்தில் காலி குடியிருப்பில் அனுமதி பெறாமல் தொழுகையில் ஈடுபட்ட 12 பேரை போலீஸார் கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

January 19, 2026

Dinamani Vellore

தொழிலாளர் நலன் காப்போம்!

உழைப்பு மனித நாகரிகத்தின் அடித்தளம்.

time to read

3 mins

January 19, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

வடகிழக்கு பாரம்பரியத்தைப் பறைசாற்றும் குடியரசு தின தேநீர் விருந்து அழைப்பிதழ்!

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது மாளிகையில் விருந்தினர்களுக்கு வழங்கும் 'தேநீர் விருந்து' நிகழ்வுக்கான அழைப்பிதழ் தொகுப்பு, வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய கலை மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

January 19, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சபலென்கா, அல்கராஸ் வெற்றித் தொடக்கம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா, எம்மா ரடுகானு, எலினா ஸ்விட்டோலினா, ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்கள் கார்லோஸ் அல்கராஸ், ஸ்வெரேவ் வெற்றியுடன் தொடங்கினர்.

time to read

1 min

January 19, 2026

Translate

Share

-
+

Change font size