Versuchen GOLD - Frei
சமன்செய்து சீர்தூக்கும் கோல்!
Dinamani Tiruvarur
|November 03, 2025
தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.
உரல், உலக்கை, திருகை, ஆட்டுக்கல், அம்மி, அச்சாணி போன்றவை அருங்காட்சியகத்தில் மட்டுமே இன்றைக்குக் காணக் கூடியனவாக உள்ளன. இன்னும் அறியப்படாத பல பொருள்கள் இலக்கியங்களிலே சுட்டப்பட்டிருக்கின்றன. அவை பொருளாக மட்டுமின்றி சமுதாயத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றன; அவற்றுள் ஒன்றுதான் கோல் என்னும் கருவி.
கோல் என்பதற்கு மரத்தாலான கழி என்பதுதான் இயல்பான பொருள். அடிப்படையில் அவை அளவினைச் சுட்டுகின்ற அளவுகோலாகத்தான் அறியப்பட்டன. அதைத்தான் நாம் இன்றைய காலத்தில் 'ஸ்கேல்' என்கிறோம். அடிக்கோல் மாறி 'அடிஸ்கேல்' ஆகிப்போனது.
கோலில் பல வகைகள் உண்டு. ஊன்றுகோல், அளவைக்கோல், துலாக்கோல், தீக்கடைக்கோல் என்னும் ஞெலிகோல், தலைக்கோல், எழுதுகோல், அரசர்கள் கரத்திலிருக்கும் செங்கோல் வரையிலும் அவை நீள்கின்றன.
இலக்கியங்களிலும் பல இடங்களில் கோல் குறித்துச் சுட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, ஔவையார் தான் குறிப்பிடுகிற 'வரப்புயர' என்னும் பாடலில் ‘குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்' என்கிறார். திருவள்ளுவரும் சில குறள்களில் வெவ்வேறு பொருளில் கோலினைக் குறிக்கிறார். அவற்றுள் 'சமன்செய்து சீர்தூக்கும் கோல்' என்னும் அது எந்தக் கோலாக இருக்கும்?
ஏனென்றால் இத்தனை கோல்களும் சமுதாய வளர்ச்சியை அடையாளம் காட்டுகிற சான்றுகோல்களாக விளங்குகின்றன.
கடவுள் தொடங்கி அருளாளர்கள் வரையிலும் இந்தக் கோலைப் பற்றியிருக்கிறார்கள் என்பதை இலக்கியங்களில் அறிய முடிகிறது.
தன் செங்கரங்களால் வடித்த வேலினை எடுத்துப் பகையரசரைத் துரத்தும் பணியைச் செய்யும் கோமானான கோபாலன், கோலினை எடுத்துப் பசுக்களை (புல்லாங்குழலாகிய கோலெடுத்து ஆன்மாக்களையும்) வசப்படுத்துவதிலும் வல்லவனாக விளங்குகிறான் என்று ஒரு பாடலும் உண்டு.
முருகனின் கையில் பொதுவாக வேல் தான் இருக்கும். அதனாலேயே வேலாயுதன் என்ற பெயரும் பெற்றவன். ஆனால் பழங்கால சித்தர் மரபுகளிலும், தண்டம் என்னும் கோல் கைக்கொண்ட முருகன் வடிவம் உண்டு. முருகன் துறவுபூண்டு எல்லா அணிகலன்களையும் நீக்கிக் கோலை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டான். இந்தக் கோல் அவனுடைய தவப் பெருமையையும் ஒடுக்கத்தையும் குறிக்கிறது.
Diese Geschichte stammt aus der November 03, 2025-Ausgabe von Dinamani Tiruvarur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது
பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.
1 mins
June 07, 2026
Dinamani Tiruvarur
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Tiruvarur
12-ஆம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கும் வாய்ப்பு
12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தகுதி மதிப்பெண்களைவிட குறைவாகப் பெற்ற மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்று ஜேஇஇ தரவரிசை அடிப்படையில் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ஐஐடி ரூர்க்கி சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
June 07, 2026
Dinamani Tiruvarur
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvarur
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Tiruvarur
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvarur
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvarur
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvarur
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Tiruvarur
தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்
1 mins
June 07, 2026
Listen
Translate
Change font size
