Facebook Pixel மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்? | Dinamani Tiruvarur – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?

Dinamani Tiruvarur

|

July 28, 2025

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.

- அறச்சலூர் இரா.செல்வம்

ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய 'சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு 'தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.

மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.

55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களைத் தீவனமாக்கி, இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போதுதான் அந்த ஆபத்து புரியும்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படிகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.

மேலும், அவை வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்துத் தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிகச் சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஜெமிமா அரை சதம்; இந்தியா 198-க்கு ஆட்டமிழப்பு

மகளிர் பிங்க் பந்து டெஸ்ட்

time to read

1 min

March 07, 2026

Dinamani Tiruvarur

ஊரகத் திறனாய்வுத் தேர்வு: தெரிவுப் பட்டியல் வெளியீடு

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், உதவித் தொகைக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Tiruvarur

பிகார் முதல்வர் பதவியில் இருந்து நிதீஷ் விலக எதிர்ப்பு: ஜேடியு தொண்டர்கள் போராட்டம்

பிகார் முதல்வர் பதவியில் இருந்து நிதீஷ்குமார் விலகுவதை எதிர்த்து அவரது ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

time to read

2 mins

March 07, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

வில் ஜாக்ஸ் விக்கெட் முக்கியமானது; ஹேரி புரூக் கேட்ச் விருப்பமானது

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தாம் பிடித்த 3 கேட்ச்களில், வில் ஜாக்ஸ் கேட்ச் முக்கியமானதாக இருந்தாலும், ஹேரி புரூக் கேட்ச்சே தனக்கு விருப்பமானதாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேல் கூறினார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

6.52 கோடி இணையவழி பார்வையாளர்கள்

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதிய அரையிறுதி ஆட்டத்தை சுமார் 6.52 கோடி பேர் ஒரே நேரத்தில் இணைய வழியில் நேரலையில் பார்த்ததாக ஐசிசி அறிவித்துள்ளது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Tiruvarur

பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

தமிழகத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Tiruvarur

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Tiruvarur

கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளை

கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி (ஏவிபி) நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உடன் தங்கியிருந்த நேபாள பெண்ணையும், நள்ளிரவில் வந்து சென்ற 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Tiruvarur

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கொலை: காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

கனடாவின் விண்ட்சரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்சி க்ரேவால் (45) கொலை செய்யப்பட்டதற்கு, காலிஸ்தான் சீக்கிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அதன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் சிபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Tiruvarur

இன்னும் ஒரு கடமை எஞ்சியிருக்கிறது!

நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் கடைசி கட்டத்தில் அருமையான இன்னிங்ஸ்களுடன் உயர்ந்திருக்கும் இந்திய பேட்டர் சஞ்சு சாம்சன், இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக அதேபோல் சிறப்பான இன்னிங்ஸை விளையாடும் ஒரு கடமை எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.

time to read

1 min

March 07, 2026

Translate

Share

-
+

Change font size