Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr
The Perfect Holiday Gift Gift Now

நல்லன எல்லாம் தரும் கல்வி!

Dinamani Tiruvarur

|

July 16, 2025

ஒரு நல்ல பள்ளிக் கல்வி முறையின் அடிப்படை நோக்கம், குறிப்பிட்ட பாடங்களில் நல்ல மதிப்பெண்களை மட்டுமே உறுதி செய்வதல்ல. மாறாக, முக்கியமாக சுதந்திரமாக சிந்திக்கும் திறன் கற்பிக்கப்பட வேண்டும். இது வெற்றிக்கு மிக முக்கியமானது. அத்தகைய கல்வி முறைதான் உகந்தது.

- ஆர் நட்ராஜ்

ம் நாட்டில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் எத்தகைய மேற்படிப்பு தொடர வேண்டும்,தொழில் கல்வியா, கலைக் கல்வியா என்பதை தேர்ந்தெடுப்பதில் முழுமையாக ஈடுபடுகின்றனர். அதுமாணவரிடம் மட்டுமாகவிடப்படவில்லை! இந்த ஈடுபாடு ஒருவிதத்தில் நல்லது என்றாலும், மாணவன் என்ன விரும்புகிறான்; அவனது திறன் எதில் இருக்கிறது என்பது ஆராயப்படுவதில்லை.

பள்ளித் தேர்வு முடிவுகள் வரும்போது, அடுத்து என்ன செய்வது என்பது குடும்பத்துக்கு எப்போதும் ஒரு சவாலாக இருக்கும். அதைத் தொடர்ந்து, அடுத்து என்ன என்பதைத் தேர்ந்தெடுப்பது கடினமான பணியாகும். அந்தத் தேதிக்கு எந்தப் படிப்பு வரவேற்கப்படுகிறதோ அதில் எல்லோரும் குவிகிறார்கள். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ; உயர் கல்வி திணிக்கப்படுகிறது!

இளைஞர்கள் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் என்னென்ன பணிகளை விரும்புகிறார்கள் என்பது குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானோர் அரசுப் பணியைத் தேர்ந்தெடுக்க விரும்பினர். சுமார் 20 சதவீதம் பேர் தனியார் துறையிலும், 20 சதவீதத்துக்கும் குறைவானோர் தொழில்முனைவோராகவும் விரும்பினர்!

அதிகாரம் மற்றும் வேலை பாதுகாப்பு காரணமாக அரசுப் பணி இன்னும் சமூகத்தில் அந்த மரியாதையைப் பெற்றுள்ளது. அதிகாரமும், பணமும் ஈர்க்கின்றன; ஆனால், சேவையும் தியாகமும் மறக்கப்படுகின்றன.

இந்தியா போன்ற வளரும் நாட்டில், கல்வியில் சிறந்து விளங்குதல் ஒன்றுதான் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்துக்கான உறுதிமொழிக்கு ஒரு சக்தி வாய்ந்த உந்துதலாகவும், கருவியாகவும் உள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியின் தரம், அவர்கள் எங்கு படிக்கிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பது குறித்து அடிக்கடி கவலைப்பட வேண்டும். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது ஆன்றோர் வாக்கு.

தரமான கல்வி ஒரு நல்ல வாழ்க்கைக்கான கடவுச் சீட்டு என்பது உண்மை. அதிக ஊதியம் தரும் தொழில் என்ற வாக்குறுதியுடன் கணினி அறிவியல், தரவு அறிவியல், வணிகவியல் போன்ற தற்போது பிரபலமான படிப்புத் துறைகளுக்கு இது குறிப்பாக உண்மை.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி

சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvarur

மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvarur

பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது

திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvarur

ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா

கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvarur

4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு

நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvarur

வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvarur

மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது

தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvarur

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.

time to read

2 mins

December 20, 2025

Dinamani Tiruvarur

1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி

மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்

நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலானது 'பூலோக வைகுண்டம்', 'பெரிய கோயில்' என்றெல்லாம் போற்றப்படுகிறது.

time to read

2 mins

December 19, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back