Versuchen GOLD - Frei
மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!
Dinamani Tiruppur
|March 21, 2025
உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.
ம்பை பாந்த்ரா நகர்ப்புறத்தில் ஒரு பொது உரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த காணொலி நிகழ்வில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் நிபுணர் பிரையான் ஜான்சன் பங்கேற்றார். நிகழ்ச்சியின் நடுவில் அவர், 'சுற்றுப்புறக் காற்றில் அதிக மாசு படிந்துள்ளது; தொண்டையை எரியச் செய்கிறது; கண்களில் நீர் கசிகிறது; தோல் வறண்டு வருவதுபோல் இருக்கிறது' என்று கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; மாசுக் கட்டுப்பாடு பிரச்னையை முன் வைத்தது. மனிதனின் உயிர் பாதுகாப்புக்கும் சுகமான வாழ்க்கைக்கும் முக்கியமானவை ஆரோக்கிய உணவு, மாசில்லாத காற்று, சுத்தமான குடிநீர்.
போகி பண்டிகையின்போது பழைய பொருள்களைக் கழித்து வீட்டைச் சுத்தம் செய்து பொங்கல் தின நாளை வரவேற்கத் தயாராக வேண்டும் என்பது ஐதீகம். ஆனால், அந்த நாளில் பழைய பொருள்களுடன் பிளாஸ்டிக், வாகன டயர் எல்லாவற்றையும் கலவையாக வீட்டு வாசலில் கொளுத்தும் கொடிய பழக்கம், சீர் செய்ய முடியாத மாசைப் படரச் செய்கிறது.
சமீபத்தில் கட்டட வேலையின்போது எழும் தூசு, கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாழாக்கக் கூடாது என்ற வகையில் சென்னை மாநகராட்சி அதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுமானப் பகுதியைச் சுற்றி துணியால் மூடப்பட வேண்டும்; கழிவுகளோ துகள்களோ வெளியில் விழக்கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறுபவர்களுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது சென்னையில் பல இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்படுவதும் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதுவும் இரவு -பகலாக. இதனால், அக்கம்பக்கத்தினர் படும்பாடு சொல்லி மாளாது. விதிகள் ஏட்டளவில் மட்டும் இல்லாது, கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
Diese Geschichte stammt aus der March 21, 2025-Ausgabe von Dinamani Tiruppur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruppur
Dinamani Tiruppur
டபிள்யுடிஆர் செஸ்: வைஷாலி சாம்பியன்
நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சிறிது நேரத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற டபிள்யுடிஆர் மகளிர் செஸ்டூர் போட்டியில் அவரது சகோதரி வைஷாலி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 min
June 07, 2026
Dinamani Tiruppur
பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது
கல்வித் துறை
1 min
June 07, 2026
Dinamani Tiruppur
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Tiruppur
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Dinamani Tiruppur
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruppur
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Tiruppur
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruppur
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Tiruppur
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Tiruppur
வேளாண் பல்கலை. பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
1 min
June 07, 2026
Translate
Change font size
