Versuchen GOLD - Frei
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
Dinamani Tirunelveli
|November 02, 2025
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
ஒவ்வொரு திரைப்பட ஜானர்களுக்கும் ஒரு சீசன் அமையும். ஒரு பேய்ப்படம் ஹிட் அடித்தால், அதைத் தொடர்ந்து பேய்ப் படங்களாக வரும். அது போலவே காதல் படங்கள் வெற்றி பெற்றால், காதல் பற்றிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.
ஆனால், பயோபிக் திரைப்படங்களைப் பொருத்தமட்டில் அதற்கென தனி சீசன் எதுவும் கிடையாது. எவர்க்ரீனாகத் தொடர்ந்து எப்போதும் பயோபிக் திரைப்படங்கள் வந்துகொண்டே இருக்கும். ஹாலிவுட்டில்தான் முதன்முதலாக பயோபிக் திரைப்படங்கள் வெளியாயின. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பயோபிக் என்ற வகையிலான சினிமாவை எடுக்கத் தொடங்கியது ஹாலிவுட்.
அப்படி ஆப்ரகாம் லிங்கனுடைய பயோபிக் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டது ஹாலிவுட். நாளடைவில் பயோபிக் திரைப்படங்களின் வடிவங்களும் மாற்றத்தை எட்டியது.
இந்தியாவில் 1950-களில் புராணக் கதைகளைத்தான் முதன்முதலில் எடுத்து வெளியிட்டார்கள். அதன் பிறகுதான் உண்மையான பயோபிக் திரைப்படங்கள் இந்திய சினிமாவில் வெளியாகத் தொடங்கின. இப்படித்தான் 1965-ஆம் ஆண்டு பகத் சிங்கின் பயோபிக் திரைப்படமாக 'ஷாகீத்' திரைப்படம் வெளியானது. இதன் பிறகு பயோபிக்கின் வடிவம் சற்றே மாற்றத்தை எட்டியது.
பெரும்பாலும் இந்தியாவின் முக்கிய தலைவர்களின் கதைகளும், முக்கிய விளையாட்டு வீரர்களின் கதைகளும் படமாக எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவின் முகமாக இருக்கும் பலரின் கதைகளை பாலிவுட் எடுக்கும்போது அது இந்தியா முழுவதும் கவனம் பெற்றது.
Diese Geschichte stammt aus der November 02, 2025-Ausgabe von Dinamani Tirunelveli.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Dinamani Tirunelveli
அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.
1 min
November 03, 2025
Dinamani Tirunelveli
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
1 mins
November 03, 2025
Dinamani Tirunelveli
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Tirunelveli
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tirunelveli
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Listen
Translate
Change font size
