Versuchen GOLD - Frei
பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!
Dinamani Tirunelveli
|August 26, 2025
ண்மையில் 'பாதை மாறாப் பயணம்' என்று முன்னாள் மந்திரி ஒருவர் பேசினார்! 'நகம் முளைத்த நாளாக நான் ஒரு கட்சியிலேயே இருக்கிறேன்' என்று தன்னுடைய ஒரே பெருந்தகுதியாக, இடையறாமல் இதை இந்நாள் மந்திரி ஒருவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!
ண்மையில் 'பாதை மாறாப் பயணம்' என்று முன்னாள் மந்திரி ஒருவர் பேசினார்! 'நகம் முளைத்த நாளாக நான் ஒரு கட்சியிலேயே இருக்கிறேன்' என்று தன்னுடைய ஒரே பெருந்தகுதியாக, இடையறாமல் இதை இந்நாள் மந்திரி ஒருவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!
பாதை மாறாப் பயணங்களின் அடிநோக்கம் 'இலாபகரமானது' என்பதுதான்! இத்தகைய நிலையில் எவன்தான் கட்சி மாறுவான்? கட்சி மாறினால் ஈவு போய்விடாதா? ஒரு கட்சி சிலருக்கு மட்டும் இத்தகைய வாய்ப்புகளைக் கொடுத்து விட்டு, பிறரைத் தெருவிலே விட்டு விட்டால், அந்தக் கட்சியில் எவனும் தொடர்ந்து இருக்க மாட்டான்! ஆட்சிக்கு வரும்போது சுரண்டல் பரவலாக்கப்பட்டு விடுவதுதான் இந்தக் கட்சிகளின் ஏற்றத்திற்கான ஒரே அடிப்படை!
மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பஞ்சாயத்து, கூட்டுறவு நிறுவனங்கள்; கோயில்களில் அறங்காவலர்கள்; சாலை போடல், ஏரி தூர்வாரல் போன்றவற்றிற்கான ஒப்பந்தங்கள்; அரசு நிறுவனங்களில் வேலை பெறல்; வேலைபெறத் தகுதி இல்லை எனில், தகுதியுடையவனுக்குப் பரிந்துரைத்து அதற்குப் பணம் பெறல்; இன்னும் எண்ணத்தொலையாச் சலுகைகள், வசதிகள்!
இவைபோக கனிமவளச் சுரண்டல்; மலைகளைச் சல்லிகளாக்குவதில், கிரானைட்டாக ஏற்றுமதி செய்வதில் சுரண்டல்; வன வளச் சுரண்டல்; ஆற்றுமணல் சுரண்டல்! இவற்றிற்கிடையே மக்களுக்கும் சில கஞ்சிப் பருக்கைகள்!
இவற்றை அடைய முடியாத அடிமட்டத் தொண்டர்களுக்கு ஊர்வலம் போனால் குவார்ட்டர் மற்றும் பிரியாணி; ஒரு நாள் சம்பளம்; கூட்டம் கேட்க வருவதற்கு தையல் மிசின், குடம், சேலை, வேட்டி என்று அடிநிலைத் தொண்டர்களுக்கும் பங்கிடல்! இந்தியாவிலேயே பெரிய கார்ப்பரேட் தொழில் அரசியல் கட்சி நடத்துவதுதான்! வங்கத்தில் நடப்பது 'மமதா மாடல்' தமிழ்நாட்டில் நடப்பது 'திராவிட மாடல்'! பெயர்தான் வித்தியாசம்.
காந்திதான் அரங்குக்குள் இருந்த அரசியலைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்தவர்! அவர் காலத்தில் காங்கிரசில் மாவட்டத்திற்கு வெறும் ஐநூறு, ஆயிரம் பேர் தான் இருப்பார்கள்! தொண்டும், சிறை புகலும், பொதுவாழ்வின் நோக்கமாக இருந்ததால், வெட்டித்தனமானவனுக்கெல்லாம் கட்சியில் என்ன வேலை?
இன்றைக்குக் கட்சிகளில் எழுபது, எண்பது இலட்சம் பேர் உறுப்பினராக இருப்பதற்குக் காரணம், கட்சி ஒரு 'தொழிலாகி' விட்டதுதான்! இதைத் தொழிலாக்கியது கருணாநிதி! மனம் தடித்தவர்கள் அரசியலுக்குள் நுழைகின்ற காலம் தொடங்கியது!
Diese Geschichte stammt aus der August 26, 2025-Ausgabe von Dinamani Tirunelveli.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size