Versuchen GOLD - Frei
இந்தியா வெறும் கல்விச் சந்தையல்ல!
Dinamani Tirunelveli
|August 20, 2025
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியச் சூழலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், தங்கள் சொந்த நாட்டின் பாடத்திட்டங்களை அப்படியே இங்கே திணித்தால், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் அறிவு மரபுகளையும், தனித்துவமான கலாசார செழுமையையும் அவை புறக்கணிக்கக்கூடும்,
பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் குஜராத்தின் அகமதாபாதில் உள்ள கிஃப்ட் சிட்டி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற இந்திய பெருநகரங்களில் தங்கள் வளாகங்களை அமைக்கும் திட்டங்கள், இந்திய உயர் கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளன. உலகளாவிய கல்வி மையமாக உருவெடுக்கும் இந்தியாவின் லட்சிய பயணத்தில் இது ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
அதேநேரம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இந்திய வருகை, ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்புகிறது. இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் இந்திய மாணவர்களுக்கு அறிவைப் போதிக்கும் இடங்களாக மட்டுமே இருக்குமா? அல்லது இந்தியக் கல்வி முறையிலிருந்தும், நமது கலாசாரத்திலிருந்தும் அவர்களும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்களா? அதாவது, இருதரப்புக்கும் பரஸ்பரம் கற்றுக்கொள்ளும் தளமாக அவை மாறுமா? என்பது தான் அது.
இந்திய உயர் கல்வித் துறையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் காலடி வைப்பதற்கு வழிவகுத்த பின்னணியிலிருந்து தொடங்குவது, இந்தப் புதிய அத்தியாயத்தின் நோக்கத்தையும் தாக்கத்தையும் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும்.
உலகத் தரவரிசையில் சிறந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்கலாம் என்ற தொலைநோக்குத் திட்டத்தை 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை முன்மொழிந்தது. இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 2023-இல் இதற்கான விரிவான விதிமுறைகளை வகுத்தது.
இந்த விதிமுறைகளில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சில முக்கியச் சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம், அவை தங்கள் சொந்த நாட்டு வளாகங்களில் வழங்கும் பட்டங்களுக்குச் சமமான பட்டங்களை இந்தியாவிலும் வழங்க முடியும். மேலும், ஊழியர்களை நியமிப்பது, நிதி நிர்வாகம் மற்றும் கல்விக் கட்டணங்களை நிர்ணயிப்பது போன்ற முக்கிய விஷயங்களில் அவற்றுக்குக் கணிசமான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.
Diese Geschichte stammt aus der August 20, 2025-Ausgabe von Dinamani Tirunelveli.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size