Versuchen GOLD - Frei
மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!
Dinamani Tiruchy
|October 01, 2025
அக்டோபர் 2மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?
மகாத்மா காந்தி 1915-இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அதுமுதல் ஓய்வில்லாத தேச ஒற்றுமைப் பணி- தொடர் போராட்டங்கள்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் (1915-1919) அவரது உடல் மெலிந்தது; நலிந்தது. அப்போது, அவர் வசித்த இடம் சபர்மதி ஆசிரமம்; 1919, அக்டோபர் 2-ஆம் தேதி அவரது 50-ஆவது பிறந்த நாள் வந்தது.
அன்று அவரது உடல் நிலை சரியில்லை. மோசமடைந்து வருகிறார்; தொடர்ந்து இருமுகிறார். உடனே வருமாறு அவரது மகன்களுக்கு தந்திகள் அனுப்பப்படுகின்றன. மகன் தேவதாஸ் வந்து தந்தையை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார். மகாத்மா காந்தி எதுவும் பேசவில்லை. ஆசிரமவாசிகளிடம் ஏன் இவ்வளவு பேர் இங்கே வந்தீர்கள்? அவரவர் பணியைச் செய்ய வேண்டாமா? என்றார். எந்நிலையிலும் தன் நலம் கருதாமல், பிறர் துயர் துடைப்பதே இறைப் பணி! இதுதான் அண்ணல் நமக்கு விட்டுச் சென்ற 50-ஆவது பிறந்த நாள் செய்தி!
1931 அக்டோபர் 2-ஆம் நாள். அது மகாத்மா காந்தியின் 62-ஆவது பிறந்த நாள். அப்போது, இரண்டாவது வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக மகாத்மா பிரிட்டன் சென்றிருந்தார். அங்குள்ள காந்திய அன்பர்கள், அவரது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பினர். லண்டன் லைசெஸ்டர் சதுக்கத்தில் உள்ள விக்டரி ஹாலில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தியர்களும் ஐரோப்பியர்களும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
பிறந்த நாள் என்பதற்காக மகாத்மா காந்தி ஓய்வு எடுக்கவில்லை; வழக்கமான பணிகளை மேற்கொண்டார். எப்போதும்போல் வட்ட மேசை மாநாட்டுக்குக் கிளம்பிச் சென்று விட்டார். அங்கோ விவாதங்கள் நீடித்தன. மாநாட்டுப் பணிகள் அவரை மிகவும் களைப்பாக்கியிருந்தன. விழா அரங்குக்கு காந்தி வருவதற்கு, காலதாமதம் ஆகிவிட்டது. அது மகாத்மா காந்திக்கு மிகுந்த கவலையைத் தந்தது.
விழா அரங்கில் அவர் அதிகம் பேசவில்லை. பேச்சைத் தொடங்கி அவர் சொன்ன முதல் வாசகம்,
'தவிர்க்க இயலாத காரணத்தால், நான் இங்கே வருவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. காலதாமதத்துக்கு வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்பதாகும். வந்திருந்த விருந்தினர்கள் அதைக்கேட்டு கண்கலங்கி நின்றனர்!
காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது மகாத்மா காந்தி கற்பித்த, கடைப்பிடித்த நெறிமுறைகளில் ஒன்றாகும்.
Diese Geschichte stammt aus der October 01, 2025-Ausgabe von Dinamani Tiruchy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy
Dinamani Tiruchy
டிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ.891 கோடி
46% அதிகரிப்பு
1 min
January 29, 2026
Dinamani Tiruchy
உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய அரசு மருத்துவர்கள்
ஊதிய உயர்வு, பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் புதன்கிழமை (ஜன.
1 min
January 29, 2026
Dinamani Tiruchy
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான அரசு விசாரணை குடிமக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் உண்மையான தகவலை அறிவதற்கான உரிமைகளை மீறுவதாக உள்ளதாகப் புகார் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.
1 mins
January 29, 2026
Dinamani Tiruchy
அல்கராஸ் - ஸ்வெரெவ் | சபலென்கா - ஸ்விடோலினா
அரையிறுதியில் மோதும்
1 min
January 28, 2026
Dinamani Tiruchy
'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கைச் சான்று: தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து
தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min
January 28, 2026
Dinamani Tiruchy
பிப்.1 முதல் பிரசாரம்: திமுக அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் 234 பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்.
1 min
January 28, 2026
Dinamani Tiruchy
தைப்பூசம்: மல்லிகை கிலோ ரூ.4,000
தைப்பூசத் திருவிழா, தொடர் முகூர்த்த நாள்கள் ஆகியவற்றை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர் சந்தையில் செவ்வாய்க்கிழமை பூக்கள் விலை உச்சத்தை எட்டியது.
1 min
January 28, 2026
Dinamani Tiruchy
சென்னையில் நாளை டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் தொடக்கம்
டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம் 2026, சென்னை வண்டலூரில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ்டிஏடி சைக்கிளிங் ஓடுதளத்தில் வியாழக்கிழமை (ஜன.
1 min
January 28, 2026
Dinamani Tiruchy
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் விடுவிக்க உத்தரவு
தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தைக் கணக்கிட்டு அதை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
January 28, 2026
Dinamani Tiruchy
கர்நாடகம்: வி.ஜி.ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் போராட்டம்
வி.பி.ஜி. ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 28, 2026
Translate
Change font size

